"மாறிய அதிகாரம்; ஆளுநர் தான் முதலமைச்சரா?" - மாஜி முதலமைச்சர் கேள்வி!

 
ரங்கசாமி

காரைக்கால் மாவட்டம் விழிதியூரைச் சேர்ந்த மறைந்த திமுக நிர்வாகி ஆர்.சரவணன் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர்  நாராயணசாமி, ''புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதவியேற்று 7 மாதங்களாகியும் இதுவரை காரைக்காலுக்கு வந்து மக்களைச் சந்திக்கவில்லை. அதிகாரிகளை அழைத்து திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்தும் பேசவில்லை. 

புதுச்சேரி முதல்வராக பதவி ஏற்றார் ரங்கசாமி : கவர்னர் தமிழிசை பதவி பிரமாணம்  செய்து வைத்தார்

மழை வெள்ளம், கொரோனா உள்ளிட்டவற்றால் காரைக்கால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும், அதுகுறித்து சிந்திக்காமல் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு காரைக்காலைப் புறக்கணித்து வருகிறது. இதுகுறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். தற்போது கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சியினர், அமைப்பினர், பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும் புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முதல்வர் நடத்தினார். 

புதுவை ஆளுநர் தமிழிசையை சந்தித்தார் என்.ரங்கசாமி! | nakkheeran

தற்போது கொரோனா, ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு முதல்வர் ரங்கசாமி முழுப் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரியில் பேரிடர் மேலாண்மைத் துறைத் தலைவராக இருப்பவர் முதல்வர். அவர் இதுவரை ஒரு கூட்டத்தைக் கூட கூட்டவில்லை. மாறாக துணைநிலை ஆளுநர் அந்தக் கூட்டத்தைக் கூட்டுகிறார். முதல்வர் பொறுப்பை எப்போது துணைநிலை ஆளுநர் ஏற்றார்? அந்த அதிகாரத்தை முதல்வர் ஏன் விட்டுக்கொடுத்தார்? இதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

chief-minister-surrenders-to-pondicherry-deputy-governor-former-chief-minister-v-narayanasamy-accused

5 ஆண்டு காலம் நாங்கள் ஆட்சியிலிருந்தபோது துணைநிலை ஆளுநரின் அதிகார மீறலை எதிர்த்துப் போராடினோம். ஆனால், முதல்வர் ரங்கசாமி தமது அதிகாரத்தைத் துணைநிலை ஆளுநரிடம் விட்டுக்கொடுத்து சரணடைந்து விட்டார். பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான அதிகார மோதலால் புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. புதுவையில் அலங்கோலமான அரசு நடந்துவருகிறது'' என்றார்.