"தமிழிசைக்கு தான் ஃபுல் பவர்... ரங்கசாமி டம்மி தான்" - நாராயணசாமி ஆவேசம்!

 
ரங்கசாமி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து புதுச்சேரி காந்திநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் முன் இளைஞர் காங்கிரஸார் கருப்பு உடை அணிந்து நடுரோட்டில் அமர்ந்து பஜ்ஜி விற்றும், ஷூ பாலிஷ் தேய்த்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணபாரதி தலைமை தாங்கினார். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷமிட்டனர். 

புதுவை ஆளுநர் தமிழிசையை சந்தித்தார் என்.ரங்கசாமி! | nakkheeran

போராட்டத்தின்போது பேசிய நாராயணசாமி, ‘‘புதுச்சேரி மாநிலத்தில் படித்த பட்டதாரிகளுக்கு கடந்த ஆறு மாதங்களாக என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தல் நேரத்தில் ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் புதுச்சேரியில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் எனக் கூறினர். ஆனால் இதுவரை பணியிடங்களை நிரப்பவில்லை. பணியிடங்களை நிரப்ப எங்களிடம் நிதியில்லை என பாஜக அமைச்சர்கள் இப்போது கூறுகின்றனர். 

Narayanasamy Announces Puducherry as Orange Zone || புதுச்சேரி ஆரஞ்சு  மண்டலமாக அறிவிப்பு நாராயணசாமி தகவல்

மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் பணியிடங்களை நிரப்பு முடியும் என முதல்வர் கூறுகிறார். இப்படி கூறுபவர்கள் ஏன்? தேர்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தார்கள். புதுச்சேரியில் 24 சதவீதம் படித்த பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர்.  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், காவல்துறை, கூட்டுறவு துறையில் ஆட்களை நியமித்தோம். பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம், தொழில் முனைவோர் ஆராய்ச்சி மையம் நாங்கள் கட்டி முடித்தது. இவர்கள் ஒன்றும் புதிதாக கட்டவில்லை.

அதிகாரத்தை ஆளுநரிடம்கொடுத்து விட்டு வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர். தமிழிசை தெலங்கானாவுக்குத்தான் முழுநேர ஆளுநர், புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர். ஆனால் ஆளுநர் புதுச்சேரியிலேயே எப்போதும் உட்காந்திருக்கிறார். ஏனென்றால் அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான். முதல்வரை டம்மியாக்கி விட்டார்கள். ஆளுநரை எதிர்த்து எதற்காக நாங்கள் போராடினாமோ, அதனை ரங்கசாமி வீணடித்து விட்டார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கவில்லை, ஆளுநரின் அரசு தான் நடக்கிறது. பாஜகவினர் சடுகுடு விளையாடுகிறார்கள். சடுகுடு விளையாடும் நேரமா இது” என்றார்.