‘100 நாட்களில் நிறைவேறாவிட்டால்.. நீங்கள் கோட்டைக்கே வரலாம்’ – மு.க ஸ்டாலின் அதிரடி பேச்சு!

 

‘100 நாட்களில் நிறைவேறாவிட்டால்.. நீங்கள் கோட்டைக்கே வரலாம்’ – மு.க ஸ்டாலின் அதிரடி பேச்சு!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூர் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மு.க ஸ்டாலினை மக்கள் பேராதரவுடன் வரவேற்றனர். நினைவு பரிசாக அவருக்கு வெள்ளி செங்கோல் ஒன்றையும் வழங்கினர். அப்போது, மு.க ஸ்டாலினிடம் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.

‘100 நாட்களில் நிறைவேறாவிட்டால்.. நீங்கள் கோட்டைக்கே வரலாம்’ – மு.க ஸ்டாலின் அதிரடி பேச்சு!

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட மு.க ஸ்டாலின், 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். உங்களது கோரிக்கை மனுவை எடுத்துக் கொண்டு நான் அறிவாலயத்திற்கு செல்வேன். மக்களின் ஆதரவுடன் ஆட்சியில் பொறுப்பேற்ற 100 நாளில் புகார் பெட்டி திறக்கப்பட்டு உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அப்படி நிறைவேற்றப்படா விட்டால் அட்டையை எடுத்துக் கொண்டு நீங்கள் கோட்டைக்கே வரலாம் என்று தெரிவித்தார். மேலும், முதல்வர் அறைக்கு கூட வந்து மனுக்களை நிறைவேற்ற கோரிக்கை வைக்கலாம் என்று கூறினார்.

ஊனையூரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட மு.க ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்திற்கு செல்கிறார். புதுக்கோட்டையில் ஸ்டாலினுக்கு பேராதரவு கிடைத்ததாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.