நீட் விலக்குக்கு ஒப்புதல் வேண்டும்.. இங்கு இருமொழிக் கொள்கைதான்.- ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்..

 
தங்கம் தென்னரசு - ஆளுநர் ரவி

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என்பது போல் ஆளுநர் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு  மறுப்பு தெரிவித்துள்ளார்.  மேலும் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என்கிற கருத்து உருவாகும் வகையில் மாண்புமிகு ஆளுநர்,  பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களை போல நம்முடைய தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் வேண்டுமெனவும்,  பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது சரியல்ல எனவும் தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.

முதன்முறையாக ஆளுநர் ஆர்.என் ரவி நாளை டெல்லி பயணம்!

தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான மொழிப் போராட்டம் என்பது நெடிய வரலாற்றை உள்ளடக்கியது. பல்வேறு கால கட்டங்களில் நடந்த மொழிப் போராட்டங்களில் தங்களது இன்னுயிரை ஈந்த மொழி போராட்ட தியாகிகளை இன்று புறந்தந்தது தமிழ்நாடு மண். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தான் அன்றைய தலைமை அமைச்சர் பண்டித நேரு இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாதவரை கட்டாயமாக இந்தியை திணிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தார்

அதன் பின்னர் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும் இருமொழிக் கொள்கையை கடைபிடிக்கப்படும் என அறிவித்தார்.  அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை கடைபிடிக்கப்பட்டு வருவதை ஆளுநருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இருமொழிக் கொள்கையால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி தகுதியிலோ அல்லது பெரும் பொறுப்புகளில் இடம் பெறும் வகையில் பெரும் வாய்ப்புகளிலோ யாதொரு பின்னடைவு குறைகளோ ஏதுமில்லை.

“உங்க ஆட்சியில நடந்தத நீங்களே மறந்துட்டீங்களா” – ஓபிஎஸ்ஸுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!

அதேபோல நீட் தேர்வின் காரணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ் தகுதிப் பட்டியலில் முதல் 1000  இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள் 579 , மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 394 பேர், ஐசிஎஸ்சி போன்ற பிற பாடத்திட்டங்களில் படித்த 27 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.  இந்த பாகுபாட்டினை களையும் வண்ணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு ஓரளவு உதவக்கூடும்.

 எனினும் அது ஒரு தற்காலிக தீர்வுதான் என்பதையும்,  மாநில பாடத்திட்ட வாரியம் மூலம் பயிலும் மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளியில் பயின்று தனியார் பயிற்சி பள்ளிகளில் ஏராளமான கட்டணம் செலுத்தி படிக்க இயலாத மாணவர்கள்,  மருத்துவப் படிப்புகளில் சமூக நீதியின் அடிப்படையில் தங்களுக்கான இடங்களை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பெற வேண்டும் எனில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுவதே  நிரந்தரமான தீர்வாக அமையும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு அது மாண்புமிகு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அந்த சட்ட முன்வடிவிற்கு தன்னுடைய இசைவினையும் விரைவில் அடித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் மருத்துவப்படிப்பு கனவுகளை நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னெடுப்புகளும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் துணை நிற்பார் எனவும் நான் நம்புகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது