அமைச்சர் நேரு -திருச்சி சிவா ஆதரவாளர்கள் மோதல்! வீட்டின் மீது தாக்குதல்; கார் கண்ணாடி உடைப்பு

 
sh

 திருச்சி சிவா எம். பி. வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.  இன்று காலையில் நடந்த இந்த தாக்குதலில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கிறது .  பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

c

 திமுகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானவர் திருச்சி சிவா.   திமுகவின் மூத்த தலைவரும் தமிழக அமைச்சருமானவர் கே. என். நேரு.   இவர்கள் இருவரும்  திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.     திருச்சி சிவா வீடு அமைந்திருக்கும் பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டு இருக்கிறது.   இதை அமைச்சர்  கே. என். நேரு திறந்து வைத்திருக்கிறார்.   இந்த திறப்பு விழாவிற்கான கல்வெட்டில் திருச்சி சிவா எம். பியின் பெயர் இடம் பெறவில்லை.  இதனால் திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் நேருவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.  தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் திமுக எம்பி திருச்சி சிவாவின் வீட்டில் இன்று காலையில் சிலர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.   இந்த தாக்குதலில் திருச்சி சிவா வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கிறது.  வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

tr

 அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்ததால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.   இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.   இந்த சம்பவத்தால் திருச்சி திமுகவில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.