‘ஸ்டாலின் பேசுவதால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்கிறது’ – அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

‘ஸ்டாலின் பேசுவதால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்கிறது’ – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என திமுகவும், ‘தமிழகத்தை நிராகரிப்போம்’ என மக்கள் நீதி மய்யமும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதே வேளையில், ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் ஆளும் அரசான அதிமுக பிரச்சாரம் நடத்தி வருகிறது. தமிழக அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் தலைவர்கள் இல்லாமல், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியும் ஸ்டாலினும் நேரடியாக களம் காணும் இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

‘ஸ்டாலின் பேசுவதால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்கிறது’ – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அதிமுகவும், ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று திமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இது தேர்தல் பிரச்சாரங்களில் எதிரொலிக்கிறது. ஸ்டாலின் முன்வைக்கும குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் அதிமுக பிரமுகர்கள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஆளும் கட்சியை விமர்சித்தே ஆட்சியை பிடித்து விட ஸ்டாலின் கணக்கு போடுவதாக அதிமுகவினர் விமர்சிக்கின்றனர்.

இந்த நிலையில், மு.க ஸ்டாலின் எங்களை பற்றி பேசுவதால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுகவை பற்றியே பேசி வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்யும் அவருக்கு நன்றி எனவும் ஏதும் செய்யாமல் இருக்கும் திமுக, செய்யும் எங்களை பற்றி தான் குறை கூறும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.