ஸ்டாலினை விமர்சிக்க, பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அதிமுகவுக்கு உரிமை இல்லை.. - கே.எஸ்.அழகிரி...
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு மக்கள் பாதிப்பிற்கு காரணமான அ.தி.மு.க.வினர் இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையோ, தமிழக அரசையோ விமர்சனம் செய்வதற்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; “ கடந்த 2015ம் ஆண்டை விட தமிழகத்தில் நடப்பாண்டில் அதிக கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு மழையின் அளவு 2015 இல் 518 மில்லி மீட்டராக இருந்தது. 2021 இல் 613 மில்லி மீட்டராக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சென்னையில் 1,167 மில்லி மீட்டர் 1,121 மில்லி மீட்டராக பெய்திருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு மக்கள் பாதிப்பிற்கு காரணமான அ.தி.மு.க.வினர் இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையோ, தமிழக அரசையோ விமர்சனம் செய்வதற்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. - தலைவர் திரு @KS_Alagiri https://t.co/4Jijkt8pbF
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) November 30, 2021