தட்டிவிட்டு தடவிக்கொடுப்பதா? திட்டிவிட்டு சிபிஎம்-ஐ கூல் செய்த திமுக

 
r

கூட்டணியில் இருந்தாலும் தொழிலாளர் சட்ட திருத்த விவகாரத்தில் திமுகவை, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன். இது சிபிஎம் நாளிதழ் தீக்கதிரில் வெளிவந்தது. இதற்கு திமுக தக்க பதிலடி கொடுத்தது.   திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் மூத்த பத்திரிகையாளர் பா. திருமாவேலன் இதற்கு பதில் அளித்து இருக்கிறார்.   சிபிஎம் கட்சியை தவறாக வழிநடத்துவது யார்? என்ற தலைப்பில் இந்த பதிலடி கட்டுரை அமைந்தது.

இதனால் கூட்டணியில் மோதல் போக்கு வலுத்ததால் தீக்கதிரில் மறுபடியும் ரங்கராஜன் பேச்சு பதிவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  பதிலுக்கு முரசொலியும் தீக்கதிருக்கு விளக்கம் அளித்து கூட்டணியை கூல் செய்திருக்கிறது.

மு

முரசொலியில் வந்த அந்த கட்டுரையில், ’’தொழிலாளர் சட்டத்தில் ஒரு திருத்தம் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது.   அதில் தொழில் சங்கத்தினர், அரசியல் இயக்கங்கள் சில விமர்சனங்களை வைத்தார்கள் . சந்தேகங்களை கிளப்பினார்கள்.  உடனடியாக இரண்டே நாளில் அந்த திருத்த சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திரும்ப பெற்றுவிட்டார்.  முதல்வரின் இந்த பேருள்ளம் நடுநிலையாளர்களால் போற்றப்பட்டு வருகிறது.  இதை தாங்கிக் கொள்ள முடியாத வகையில் சிபிஎம் கட்சியில் சில பேர் இருக்கிறார்கள். 

 அக்கட்சியின் நாளிதழான தீக்கதிரில் வெளிவந்த கட்டுரையை பார்க்கும் போது அவ்வாறு அறிய முடிகிறது .  அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே. ரங்கராஜன் சென்னை கோயம்பேட்டில் நடந்த மே தின விழாவில் பேசும்போது,  தமிழக அரசு குறித்த தவறான கற்பிதங்களை உருவாக்கியுள்ளார்.   தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா அல்லது அதிகாரங்களும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா ? அதிகாரிகள் அரசை தவறாக வழிநடத்துகிறார்கள். 

 திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் இந்த சட்டத்தை கொண்டு வர காரணமான அதிகாரிகளையும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.   திமுக அரசை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே.ஆருக்கு சொன்னது யார் ? எதை வைத்து அவர் அவ்வாறு சொல்கிறார் ? எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார்?

 டி. கே. ஆர் இதைச் சொல்ல வேண்டும்.  பொத்தாம் பொதுவாக நாலாந்தர பேச்சாளர் போல கூட்டணியில் இருந்து கொண்டு பொதுவெளியில் கூக்குரல் இடுவது தான் கூட்டணி தர்மமா?  அப்படி ஒரு அவதூறு குற்றச்சாட்டை கூட்டணி கட்சியான சிபிஎம் தனது அதிகாரப்பூர்வ நாளிதழில் தலைப்பு போட்டு வெளியிடலாமா? இரண்டே நாளில் முதல்வர் சட்டத்தை திரும்ப பெற்றாரே டி கே ஆர் சொல்லும் முதலாளி அப்போது எங்கே போனார்?  என்ன குற்றச்சாட்டு இது?  டி கே ஆர் மனதில் இப்படி  எத்தகைய வன்மம் இருந்தால் இப்படி பேசுவார்?  எத்தகைய கோபம் இருந்தால் அதனை தலைப்பாக்கிய வெளியிடுவார்கள்?  சிபிஎம் கட்சியை தவறாக தமிழக சிபிஎம் கட்சியை யாரோ தவறான தவறாக வழிநடத்தி வருகிறார்கள் என்பதுதான் நம்முடைய சந்தேகம்.

ச்

 சில தினங்களுக்கு முன்னால்  கட்சியின் சார்பில் இயங்கி வரும் பாரதி புத்தகாலயம் நூல் வெளியிட்டுள்ளது.  சர்வாதிகார இந்துத்துவா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா? என்பது தான் தலைப்பு.  பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலினையும் கார்ட்டூன் போட்டு உள்ளார்கள்.  திராவிட மாடல் மாற்றாகாது என்று சொல்லும் இந்த நூல் 95 ஆண்டு காலம் தமிழ் சமுதாயத்துக்காக உழைத்த தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்துகிறது . திராவிடம் என்பது இனவாத  திராவிட இயக்கத்தை குறிப்பாக கலைஞரை கொச்சைப்படுத்தும் நூலை வெளியிட்டு மகிழ்ந்து உள்ளார்கள். இத்தகையவர்களால் தான் சிபிஎம் வழிநடத்தப்படுகிறது. அதன் குரல் தான் டி. கே. ஆர் போன்றோரின் குரலோ? இதுதான் சிபிஎம் குரலா? என்பதே நமது கேள்வி.   திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்.. என்று சொல்லும் தகுதியோ, யோக்கியதையோ  டி. கே. ஆர் போன்றோருக்கு இல்லை ’’என்று பதிலடி கொடுக்கப்பட்டிருந்தது.

இதனால் கூட்டணியில் குழப்பம் நீடித்த நிலையில், ‘’3.5.2023 அன்று வெளியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தீக்கதிர் ஏட்டில் டி. கே. ரங்கராஜனின் மே தின உரையில் சில பகுதிகள் தவறான பொருளில் அமைந்துவிட்டது.  தொழிற்சங்கங்களும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளும் சுட்டிக்காட்டிய நிலையில் இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதும் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதும் வரவேற்கத்தக்க ஒன்று என்பதே ரங்கராஜன் உரையில் மையக் கருத்தாக அமைந்திருந்தது என தீக்கதிர் ஏடு விளக்கம் தந்திருக்கிறது.

 தீக்கதிர் தந்திருக்கும் விளக்கத்திற்கு நன்றி . பாஜக அரசியல் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக எதிர்க்கட்சியில் ஓர் அணியில் நின்று செயல்பட வேண்டும் என்கிற குறிக்கோளில் செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அரசு கொண்டு வந்த தீர்மானத்தை தோழமைக் கட்சிகள் தொழிற்சங்கங்களில் கருத்துக்கு ஏற்ப உடனடியாக ஒத்தி வைத்தது மட்டுமல்லாது அதனை திரும்ப பெற்று விட்டதாகவும் அறிவித்த நிலையில் , தீக்கதிர் ஏட்டில் வெளிவந்த ரங்கராஜனின் பேச்சு தேவையற்ற ஒன்று.  அதனால் திருமாவேலன் எழுதிய விளக்கக் கட்டுரை முரசொலியில் வெளியிடப்பட்டது . தோழமை என்பது சுட்டிக்காட்டி தவறுகளை திருத்துவதாக அமைய வேண்டுமே தவிர வேகமாக தட்டி விட்டு பின்னர் தடவி கொடுப்பதாக அமைந்து விடக்கூடாது . நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக விளங்கட்டும்’’ என்று சமாதானம் பேசி இருக்கிறது முரசொலி.