காங்கிரஸ் தலைவர்களின் விரக்தி அவர்களின் கொச்சையான பேச்சுகளில் பிரதிபலிக்கிறது.. கர்நாடக முதல்வர்

 
காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர்களின் விரக்தி, அவர்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் கொச்சையான பேச்சுகளில் பிரதிபலிக்கிறது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர்களின் விரக்தி, அவர்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் கொச்சையான பேச்சுகளில் பிரதிபலிக்கிறது. அவரவர் பதவிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்ற மொழியில் பேச வேண்டும். ஆனால் விரக்தியிலும் ஏமாற்றத்திலும் ஒருவர் அப்படி பேசுவது இயல்பு. 

பவசராஜ் பொம்மை

காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட வளர்ச்சியில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க கதையை மாற்ற முயற்சிக்கின்றனர். பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் காங்கிரஸை பின்பற்ற வேண்டாம். நமக்கு அத்தகைய மொழி தேவையில்லை. நமக்கு காங்கிரஸ் தலைவர்களின் சான்றிதழ் தேவையில்லை. பெலகாவி மக்கள்தான் நமக்கு சான்றிதழ் வழங்குவார்கள். பா.ஜ.க. நன்கு ஒழுங்மைக்கப்பட்டுள்ளது. 

பா.ஜ.க.

பெலகாவி மக்களின் பிரச்சினைகளை நாம் நிவர்த்தி செய்வோம். உள்ளாட்சி அமைப்புகளின் கட்சி உறுப்பினர்கள் பா.ஜ.க. வேட்பாளர் மகந்தேஷ் கவடகிமத்தை பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த தேர்தல் முடிவு வரும் நாட்களில் நடைபெற்ற உள்ள மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.