வாய்க்காலைத் தாண்ட வக்கு இல்லாதவர்கள் கடலை பற்றிப் பேசக் கூடாது - ஜெயக்குமார்

 
ஜ்

ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு என்றும் முதல்வர் சொல்லித்தான் அவர் இப்படி பேசுகிறாரா என்றும் ஆவேசப்பட்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.  சூடு சொரணை  உள்ளவர்கள் இப்படி பேச மாட்டார்கள் . அவர்களுக்கு அது இருப்பதே தெரியவில்லை என்றும் அவர் ஆத்திரப்பட்டார். 

 மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரை அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்து பெருந்தலைவர் காமராஜர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.   இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,    ஆ. ராசாவுக்கு வாய்க்கொழுப்பு.  ஊழலில் திளைத்த ராசா மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார். அதை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றார்.

அ

தொடர்ந்து அதுகுறித்து பேசிய ஜெயக்குமார்,   நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார்.  எதிர்க்கட்சிகளிடம் தான் தன்னுடைய  சர்வாதிகாரத்தை அவர் காட்டி வருகிறார் . தனது கட்சிக்காரர்களிடம் அதை காட்டுவதே இல்லை.   ஆட்சியை விமர்சனம் செய்தால் வழக்குகள் போடுவது, சிறையில்  தள்ளுவது.   இதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.  

  பெருந்தலைவர் காமராஜர் விடுதலைப் போராட்ட வீரர்.  சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் . அவரை கொச்சைப்படுத்துவது சரியா?  இதையெல்லாம் பார்க்கும் போது முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லித்தான் ஆ.ராசா இப்படி பேசுகிறாரா ?என்கிற சந்தேகம் எழுகிறது. 

 எதிர்க்கட்சிகளை மதிக்காத ஒரு அரசாக இந்த திமுக அரசு இருக்கிறது என்றார்.

ட்ட்

 காமராஜர் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசியதற்கு காங்கிரஸ் கட்சியினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு,   காங்கிரஸ் கட்சி ஜால்ரா கட்சி. திமுகவிற்கு பக்க வாத்தியமாக இருக்கிறது.  சூடு சொரணை உள்ளவர்கள் பேசுவார்கள்.  அவர்களுக்கு அது இருப்பதே தெரியவில்லை என்று கடுமையாக விளாசினார். 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆட்சியின் அவல நிலையை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.  எங்கள் ஆட்சியின் சாதனை மக்களுக்கு நன்றாக தெரியும் . அதை மனதில் வைத்து உயிரோடு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்றவரிடம்,   இரட்டை இலை வெற்றி பெறாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சொன்னது குறித்த கேள்விக்கு,   வாய்க்காலை தாண்ட வக்கு இல்லாதவர்கள் கடலை பற்றி பேசக்கூடாது என்று கடுமையாக சாடினார்.