அண்ணாமலை சொன்ன அந்த நண்பர்கள் எடப்பாடி தரப்புத் தானோன்னு தோணுது..
எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே என் நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள் . என் வீட்டு வாடகை , காருக்கு டீசல் , எனது ஊழியர்களின் ஊதியம் எல்லாமே நண்பர்கள் கொடுக்கிறார்கள் என்று கூறினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் பதிலடி கொடுத்திருக்கிறார். எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாருமே எனது நண்பர்கள் கொடுக்கின்றார்கள் என்று சொல்லுகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகை ஒரு மாதத்திற்கு 3.25 லட்சம் ரூபாய் . இந்த வாடகை யார் கொடுக்கிறது? காருக்கு டீசல் யார் அடிக்கிறார்? என் மனைவி என்னை விட பல மடங்கு சம்பாதிக்கிறார் என்று சொன்னார் . அப்படி இருக்கும் போது எதற்காக அடுத்தவர்களின் பணத்தில் வாழ வேண்டும் .
படையப்பா படத்தில் மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது என்ற வசனம் போல பயன்படுத்துவது தான் . ஆனால் எல்லாம் மற்றவர்களுடையது என்று சொல்ல ஒரு அரசியல்வாதியாக அசிங்கமாக இல்லையா? கட்சி தேசிய கட்சியாக இருக்கலாம். ஆனால் இங்கு இருப்பவர் கோமாளி தலைவர். சாப்பாடு, சம்பளம் , கார், வீடு எல்லாம் ஓசியில் இருக்கும் மூளையும் ஓசி என நினைக்கிறேன் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருது அழகுராஜ், எனக்கென்னமோ மாசம் ஏழெட்டு லட்சம் ரூபாய் உங்களுக்கு கொடுத்து உதவுற அளவுக்கு வசதியான வகையறாக்கள் இப்போதைய நிலையில் எடப்பாடி தரப்புத் தானோன்னு தோணுது.. என்று கூறியிருக்கிறார்.