காமுகன் கூட போவதுதான் தப்பு - ஜெயக்குமாரை விளாசும் புகழேந்தி

 
p

ஆடு கசாப்பு கடைக் காரனை நம்பி போனால் என்ன நிலையாகுமோ அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பி போனவர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது.  குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் என கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.  அதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி,  கசாப்பு கடையக்காரரைக்கூட நம்பி போகலாம்.  காமுகனை நம்பித்தான் போகக் கூடாது . ஜெயக்குமாரை பார்த்தால் பெண்கள் பயந்து ஓடுகிறார்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஜ்

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  விதிமீறல்கள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  ஆடு கசாப்பு கடைக்காரனை  நம்பி போனால் என்ன நிலை வருமோ அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பி போனவர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தவர்,  குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசுகிறார் ஓபிஎஸ் என கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார்.

 அவர் மேலும்,  தென்னரசு என்கிற பெயரை சொல்ல வலிக்கிறது .  அவர் இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது என்பது முரண்பாடானது.  அரசியலில் எது நடந்தாலும் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் சந்திப்பு மட்டும் நடக்கவே நடக்காது என்று திட்டவட்டமாக கூறினார்.

 ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பதிலடி கொடுத்திருக்கிறார்.  கசாப்பு கடைக்காரருடன் நம்பி போவது கூட தப்பில்லை.  ஆனால் காமுகன் கூட போவது தான் தப்பு என்பதை ஜெயக்குமாருக்கு சொல்லிக் கொள்கிறேன் என்று கடுமையாக விளாசி இருக்கிறார்.  மேலும்,   பெண்கள் ஜெயக்குமாரை கண்டாலே பயந்து ஓடுகிறார்கள் என்றும் மேலும் விளாசி எடுத்து இருக்கிறார்.

 இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் தோல்வியை தழுவினார்.  இரட்டை இலை சின்னத்தை வைத்து கட்சியை நாசம் செய்து விட்டார் . இப்போது ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டு வெற்றி வராவிட்டால் அதிமுக அலுவலகத்தின் சாவியை ஓபிஎஸ்ன் காலடியில் ஒப்படைக்க வேண்டும் என்று ஆவேசமானார்.