இது 84! இதுக்கும் பயப்படமாட்டேன் - அண்ணாமலை ஆவேசம்

 
an

அண்ணாமலை மீது தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்குடன் சேர்த்து மொத்தம் 84 வழக்குகள் ஆகும்.   இந்த வழக்கிற்கும் பயப்பட மாட்டேன்.  முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று உறுதியாக கூறி இருக்கிறார் அண்ணாமலை.

nn

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும், பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமியின் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக பாஜக சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார். 

இந்த போராட்டத்தின்போது மெழுகுவர்த்தி ஏந்திய பேரணியும்  நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவ படையினர், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து அண்ணாமலை,   ‘’திமுக கவுன்சிலரால் படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் லான்ஸ் நாயக் பிரபு அவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். மேலும் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை ஆளுகட்சியின் செவிகளுக்கு எடுத்துரைக்கும் வண்ணம், மெழுகுவர்த்தி ஏந்தி, போர் நினைவுச்சின்னம் வரையில் சென்ற பேரணியில் திரளான பொதுமக்களும் பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர். நமது தேசத்திற்காக தங்கள் இளமை காலத்தை அர்ப்பணித்த முன்னாள் இந்திய ராணுவ வீரர்களும் , பாஜக சகோதர சகோதரிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டன குரலை பதிவு செய்தனர். 

ஒரு புறம் தமிழகத்தை சட்ட ஒழுங்கு செயலிழந்த மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறது இந்த  திமுக அரசு, மறுபுறம்  தமிழக முதல்வர்  பொதுமக்களை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.   லான்ஸ் நாயக் பிரபுவின் மரணம் குறித்து,  திமுக தொடர் மௌனம் கடைப்பிடிப்பது துரதிர்ஷ்டவசமானது!

r

எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரர்களும் அவர்களுக்கு துணையாக இருக்கும் பொதுமக்களும் திமுக அடாவடித்தனத்திற்கு ஆளாகிய போதும், தமிழக காவல்துறை வெறும் பார்வையாளராக வாய்மூடி இருந்து வருகிறது. பாஜக, லான்ஸ் நாயக் பிரபு அவர்களின் மனைவிக்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள காசோலையை வழங்குவதோடு, அவரது இரண்டு குழந்தைகளின் கல்விக்கான செலவை முழுமையாக ஏற்றுக் கொள்ளும்’’என்று கூற்யிருக்கிறார். 

  இந்த பேரணிக்கு காவல்துறை தரப்பில்  அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.   அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பேரணியில் பங்கேற்ற 3,500 பேர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணாமலை,   ‘’வழக்குப்பதிவு செய்து விட்டதால் யாரும் பயந்து விட மாட்டோம்.  இது என் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் 84 ஆவது வழக்கு.  இதற்கும் பயப்பட மாட்டேன்’’ என்கிறார். அவர் மேலும்,   ’’ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்திடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.  இல்லை என்றால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிர படுத்துவோம்’’ என்று எச்சரித்துள்ளார்.