நான் ஜெயலலிதாவின் அண்ணன்; எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் - வாசுதேவன் வழக்கு பரபரப்பு

 
j

நான் ஜெயலலிதாவின் அண்ணன் என்றும் அவரது சொத்தில் எனக்கும் பங்கு வேண்டும் என்றும் வாசுதேவன் என்கிற எண்பத்தி மூணு வயது முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

 ஜெயலலிதாவின் மகள் என்றும், சகோதரி என்றும் பலர் பரபரப்பு ஏற்படுத்தி வந்தார்கள்.  ஆனால் இந்த வாசுதேவன் ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.  மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டில் டிசம்பர் 5ஆம் தேதி அன்று உயிரிழந்தார்.  இதை அடுத்து அவரின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகள் தீபா , தீபக் ஆகியோர் மட்டுமே என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வ

 இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவை தனது சகோதரி என்றும் அவர்களின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்றும் கேட்டு கர்நாடகா மாநிலம் வியாசரா புரத்தைச் சேர்ந்த எண்பத்தி மூணு வயதான வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

 ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமன் முதல் மனைவிக்கு தான் பிறந்ததாகவும் தனது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட வேதவள்ளிக்கு பிறந்த ஜெயக்குமாரும் ஜெயலலிதாவும் தனது சகோதரர் சகோதரி என்று  கூறி இருக்கிறார்.  ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் தனது தாய் ஜெயமா தொடர்ந்த வழக்கில் வேதவள்ளி, ஜெயக்குமார் ,ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக இருந்ததையும் குறிப்பிட்டு இருக்கிறார் .

ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கு 50% தந்து விட வேண்டும் என்றும் தீபா,  தீபக் ஆகியோர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் வாசுதேவன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  

கடந்த ஆண்டு தொடரப்பட்ட இந்த மனு  விசாரணைக்கு வந்திருக்கிறது.

கால தாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவுக்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது .  இந்த மனுவை பட்டியல் இடுவது தொடர்பாக தீபா , தீபக் ஆகியோர் பதிலளிக்கும் படி மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கல் மனு மீதான மறுவிசாரணை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.  ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லி சிலர் முன்பு பரபரப்பாக பேட்டி கொடுத்து வந்தனர்.  வாசுதேவனும் முன்னர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.  ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதால் இந்த வழக்கில் அதிமுகவினர் இடையே மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும்  ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.