அந்த சம்பவத்துக்கு பிறகு அவர் மீதான மரியாதை பன்மடங்கு அதிகரித்தது.. மோடியை புகழ்ந்த தேவ கவுடா

 
கர்நாடகாவில் பா.ஜ.க., காங்கிரஸை எதிர்த்து போட்டி.. ஜெயிச்சு ஆட்சியை பிடிக்கிறோம்.. தேவ கவுடா நம்பிக்கை கர்நாடகாவில் பா.ஜ.க., காங்கிரஸை எதிர்த்து போட்டி.. ஜெயிச்சு ஆட்சியை பிடிக்கிறோம்.. தேவ கவுடா நம்பிக்கை

2014ல் மக்களவையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தை பிரதமர் மோடி நிராகரித்த பிறகு அவர் மீதான மரியாதை பன்மடங்கு அதிகரித்தது என முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்தார்.

மத சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவ கவுடா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது, நீங்கள் (பா.ஜ.க.) 276 இடங்களில் வெற்றி பெற்றால் நான் ராஜினாமா செய்வேன். மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கலாம் ஆனால் தனிப்பெரும்பான்மையுடன் 276 இடங்களில் நீங்கள் வெற்றி பெற்றால் நான் ராஜினாமா செய்வேன் என்று அவரிடம் (மோடியிடம்) நான் சொல்லியிருந்தேன். 

பா.ஜ.க.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடி எனக்கு கடிதம் அனுப்பினார். பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, மக்களவையிலிருந்து (எம்.பி. பதவி) ராஜினாமா செய்வதற்காக அவரை (மோடி) சந்திக்க நேரம் கேட்டேன். பின்பு பிரதமர் மோடியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க அவரது இடத்துக்கு சென்றேன். மோடி எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், அன்று என் கார் போர்டிகோவிற்கு வந்ததும், அவரே அங்கு வந்து எனக்கு முழங்கால் வலி இருப்பதால்,  என் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றார். 

பிரதமர் மோடி, தேவ கவுடா

அதன் பிறகு நான் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தபோது, தேர்தலில் பேசப்பட்ட விஷயங்களை ஏன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறீர்கள்? என்று பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். சூழ்நிலை எழுந்தால் உங்களின் ஆலோசனைகளை நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். அன்று முதல் பிரதமர் மோடி குறித்த எனது கருத்தை மாற்றிக்கொண்டேன். குஜராத் முதல்வராக இருந்த போதும், பிரதமரான பிறகும் அவரது ஆளுமை மாற்றத்தை உணர்ந்தேன். நான் பிரதமர் மோடியை சந்திக்க எப்போது விரும்பினாலும், அவர் என்னை உடனடியாக சந்திக்க ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.