குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு - அண்ணாமலை மீது காயத்ரி கடும் தாக்கு

 
an

வாட்ச் பில் எங்க தம்பி? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து கேட்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்.  மேலும்,  ரஃபேல் வாட்ச் பில், தம்பிக்கு வெறும் 24 மணிநேரம். நீ எப்போ வேண்டுமானாலும் உருவாக்க இது எக்செல் ஷீட், பார்ட்டி லெட்டர்பேட் அல்லது சஸ்பென்ஷன் லெட்டர் அல்ல. எங்களுக்கு அசல் பில் வேண்டும் என்கிறார். 

அண்ணாமலையுடனான மோதலால் பாஜகவை விட்டு வெளியேறிய காயத்ரி ரகுராம் அண்ணாமலையை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். 
அவர் ‘அண்ணாமலையின் பொய்யும் உருட்டும்: ’ என்ற தலைப்பில் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

g

1. வாட்ச் பில் - முதலில் ஏப்ரல் 1 ஆம் தேதி கொடுக்கப்படும், பின்னர் ஏப்ரல் முதல் வாரம் கொடுக்கப்படும், பின்னர் திமுக ஊழல் எக்சல் ஷீட் உட்பட ஏப்ரல் 14க்குள் தேசியவாதி வாட்ச் பில் தருகிறேன். 

2.அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன். 

3.பாஜகவில் வெங்காய பதவியை நான் விரும்பவில்லை. பாஜகவுக்கு என்ன ஒரு அவமானம்.

4. நான் பாஜக மேலாளர் இல்லை.

5. முதல் யாத்திரை ஜனவரி, பின்னர் ஏப்ரல் 14 ஆம் தேதி, இப்போ கர்நாடக தேர்தல் காரணமாக நான் யாத்திரைக்கு செல்லவில்லை. ஏப்ரல் வெப்பத்திலிருந்து தப்பிக்கும் திட்டம்.

6. என் பெயருக்கு பின்னால் எம்எல்ஏ, எம்பி வேண்டாம். 

7. முதலில் கட்சி. சொந்த கட்சியா?, பிறகு தொண்டர்கள். ஹரிஷ் ஆருத்ரா போன்ற தொண்டர்கள் காப்பாற்றவா? கடைசி சுயம்.  யாருடைய பணத்தில் ஊரான் விட்டு பணத்தில் விளம்பரம்?

இதெல்லாம் நேர்காணலில்  அண்ணாமலை சொன்னது என்று பதிவிட்டு, குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு, அண்ணாமலையின் பேச்சு தண்ணீரில் எழுதியாச்சு ஆ? என்கிறார் காயத்ரி.