பொய் வழக்கு போடுவேன் என மிரட்டி திமுக-விற்கு ஆள்சேர்க்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.. - இபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம்..

 
EPS , OPS

 குட்கா வைத்திருப்பதாக பொய் வழக்கு போட்டுவிடுவேன் என மிரட்டி, அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவிற்கு ஆள் சேர்ப்பதாக , அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து இருவரும் இணைந்து கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அதில், கரூர் மாவட்ட ஊராட்சி  குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 22.10.2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  மொத்தம் உள்ள 12 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களில் கழகத்தை சேர்ந்தவர்கள் 8 பேர்,  திமுகவை சேர்ந்தவர்கள் 4 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.

admk  arikkai 1

மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கழகத்தை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மிரட்டப்பட்டு வந்தனர். இந்நிலையில் தேர்தல் நாளான 22.10.2021 அன்று 4 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட திமுக வெற்றி பெற முடியாது என்பதால்,  தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளும் கட்சிகளின் மிரட்டலுக்கு பயந்து தேர்தலை தள்ளி வைத்துள்ளார். தேர்தல் அதிகாரி ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார்.

இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கேட்ட போது காவல்துறை அதிகாரிகளை வைத்து தாக்குதல் நடத்தி,  அங்கிருந்தவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு இருக்கிறார்கள். அதன்பிறகு  வார்டு உறுப்பினர்கள் மற்றும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மாண்புமிகு நீதியரசர் தேர்தல் ஆணையத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும்  தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும்,  தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.

தேர்தலில் தோற்று விடுவோம் என தெரிந்த மாவட்ட அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவரது சகோதரர் திரு.அசோக்குமார் தூண்டுதலின்பேரில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை வைத்து கழகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் மிரட்டியும் வருகின்றனர்.  சில நாட்களுக்கு முன்பு கழகத்தைச் சேர்ந்த கரூர் மாவட்ட  2வார்டு உறுப்பினர் திரு M.அலமேலு அவர்களின்  கணவர் மீது குட்கா வைத்து இருந்ததாக ஜாமினில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் காவல்துறையினர் 2 பொய் வழக்குகளைப் போட்டு உள்ளனர்.

admk  arikkai 2

அவரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து மிரட்டப்படவே வேறுவழியின்றி 18 .11.2001 அன்று திமுகவில் சேர்ந்து விட்டனர் .இதேபோல் மேலும் சில கழக உறுப்பினர்களும் ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கு பயந்து திமுகவில் இணைந்து விட்டனர். இதேபோல் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கழக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் , கழக உடன்பிறப்புகளை  அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.  அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

நேர்மையாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் திமுகவிற்கு ஆள் சேர்ப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.  அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சந்திக்க முடியாத திராணியற்ற திமுகவை வன்மையாக கண்டிக்கிறோம்.”  என்று குறிப்பிட்டுள்ளார்.