தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா வாக்குரிமையையும், மாநிலங்களின் உரிமையையும் பறிக்க வழிவகுக்கும்.. - கே.எஸ்.அழகிரி...

 
கே எஸ் அழகிரி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா வெகுஜன மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கும்,  மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும் என தாமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்திருக்கிறார்.

ஒதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மோடி அரசின் தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா வெகுஜன வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும்.  பணபலத்தில் தேர்தல் நடத்துவதைத் தடுப்பதை உள்ளடக்கியதாக இருப்பதே உண்மையான தேர்தல் சீர்திருத்தம்.   தேர்தல் சட்ட திருத்த மசோதாவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்யுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்; வாக்காளர் பட்டியல் வெளியீடு!

மக்களவையில் எந்த விவாதமும் நடத்தாமல் இதே மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது, புட்சாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. இதுமட்டுமின்றி,  வெகுஜன வாக்குரிமையைப் பறிக்க வழிவகுக்கும் என்ற முக்கிய அச்சமும் இருக்கிறது. குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட பல பிரச்சினைகளில், ஆதார் அட்டை இல்லாததால் பலர் பிரச்சினையை எதிர்கொண்டதைப் பார்த்தோம். இதனால்தான் தேர்தல் சீர்திருத்த சட்டதிருத்த மசோதாவின் நோக்கம் குறித்த அச்சம் ஏற்படுகிறது.

காவல் துறையில் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்! – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை மோடி அரசு விரும்புகிறது. மாநிலங்களின் அதிகாரம் மதிக்கப்பட வேண்டும். மேலும், மாநில தேர்தல் ஆணையங்கள் மத்திய அரசின் ஆணைகளை பின்பற்ற நிர்ப்பந்திக்கக் கூடாது.குற்றவாளிகள், வகுப்பு வாதிகள், சாதி வெறியர்கள் மற்றும் வெறுப்பு அரசியலை வாக்காளர்கள் மத்தியில் தூண்டுபவர்களை தடுப்பதிலிருந்து தேர்தல் சீர்திருத்தம் தொடங்க வேண்டுமே தவிர, மாநில அரசுகளின் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பறிக்கக்கூடாது. “என்று குறிப்பிட்டுள்ளார்.