திமுகவின் கைக்கூலியாக இருக்கிறார் எடப்பாடி! ஓபிஎஸ் ஆதரவாளர் குற்றச்சாட்டு

 
எ

திமுகவின் கைக்கூலியாக இருக்கிறார் ஓபிஎஸ் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில்,  திமுகவின் கைக்கூலியாக இருக்கிறார் இபிஎஸ் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் குற்றம்சாட்டி இருக்கிறார்.  அதிமுகவை அழிப்பதற்காக கைக்கூலியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன்.

 அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நாஞ்சில் கோலப்பன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது ,   எடப்பாடி பழனிச்சாமி தான்தோன்றித்தனமாக நடந்ததால்தான்  ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது என்றவர்,  கடந்த தேர்தலில் எட்டாயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்த இந்த தொகுதியில் இப்போது 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்திருக்கிறது.  இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி யாருடனோ கூட்டு வைத்துக்கொண்டு அதிமுகவை அளிக்க முயற்சித்து வருகிறார் என்று ஆவேசப்பட்டார்.

ன

சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என்று எட்டு தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி ஆளுமை இல்லாதவர் என்பது உறுதியாகிவிட்டது.  அதனால் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

முன்னாள் அதிமுகவின் பொதுச் செயலாளரும்,  மறைந்த முதல்வருமான ஜெயலலிதாவின் நினைவு இடம் கட்டியதில் 18 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது. ஆனால் தமிழக பொதுப்பணித்துறை அதை மூடி மறைத்து வேடிக்கை பார்த்து வருகிறது.   இதனால், திமுகவோடு தொடர்பிலிருந்து செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்ற சந்தேகம் எழுகிறது என்றவர்,  

 எட்டு முறை தோல்வி கண்ட எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் அதிமுகவில் பயணித்த ஓபிஎஸ் பல சோதனைகள் சாதனைகளை கண்டவர் . அதனால் அவரின் பேச்சை தான் கேட்க வேண்டும்.  நான்காண்டு காலம் இடையில் வந்த இடைக்கால பொதுச்செயலாளர் பாதியிலே சென்று விடுவார்.   அவரிடம் பணம் இருக்கிறது பின்னால் சென்றால் தோல்வி மட்டுமே வரும் என்று அதிமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இடைக்கால பொதுச்செயலாளர் என்று தெரியாமலேயே செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  அதிமுகவை அழிப்பதற்கு என்றே அவர் பிற கட்சிகளுக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.  இதை புரிந்து கொண்ட பாஜக எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வருகிறது தென் மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கப்படுவார் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வெறுப்பை பெறுவார் அவரது உருவப்படங்கள் உருவ பொம்மைகள் எரி தமிழ்நாட்டு மக்களால் எரிக்கப்படும் என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.