சிறைக்குள் மனைவியுடன் குடித்தனம்! ரகசிய ஆய்வில் மாட்டிக்கொண்ட எம்.எல்.ஏ.

 
abbas

அரசியல்வாதிகள் சிறைக்கு செல்வதென்றால் அது பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு செல்வது போல் என்ற விமர்சனம் இருந்து வருகிறது.  அது உண்மைதான் என்பதற்கு ஏற்ப ஆதாரங்களும் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றன.   அந்த வகையில் தான் எம்எல்ஏ ஒருவர் சிறை தண்டனை பெற்று சிறைக்குள் இருந்தபோது தன் மனைவியையும் அழைத்து வந்து தனிக்குடித்தனம் நடத்தி இருக்கிறார்.  ரகசிய ஆய்வில் அவர் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

an

உத்திர பிரதேச மாநிலத்தில் பாரதிய சுகல் தேவ் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி.   இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.   சிறையில் தங்கி இருக்கும் இவருக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு சொகுசு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அதனால் அப்பாஸ் அன்சாரியுடன் அவரது மனைவி நிக்கத் பானுவும் சிறையில் தங்கி இருப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள்.

 சிறைக்குள் கைதி ஒருவர் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருவது சிறைக்குள் மனைவி உடன் உல்லாசமாக இருப்பது எஸ்பி பிருந்தா சுக்லாவுக்கு புகார் சென்று இருக்கிறது.   இதில் சிறை கண்காணிப்பாளர் அசோக் சாகர் பெருந்தொகையை பெற்றுக்கொண்டு அப்பாஸ் அன்சாரிக்கு உதவி வருவதையும் புகாரில்  குறிப்பிட்டுள்ளார்கள்.

a

 இதை அடுத்து ஆட்சியர் அபிஷேக் ஆனந்துக்கு எஸ் பி தகவல் அனுப்பி இருக்கிறார்.   அதன் பின்னர் ஆட்சியரும் எஸ்பியும் ரகசியமாக தனியார் வாகனத்தில் சிறைக்குச் சென்று  திடீர் சோதனை நடத்தி இருக்கிறார்கள் . 

அந்த சோதனைகள் சிறை கண்காணிப்பாளர் அசோக்கின் அலுவலக வேலை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்திருக்கிறது.  கதவை உடைத்து பார்த்த போது உள்ளே அப்பாஸ் அன்சாரியும் அவரது மனைவியை நிக்கத் பானுவும் இருந்துள்ளனர்.   அங்கு குடும்பம் நடத்திய அன்சாரி அங்கிருந்தபடியே செல்போன் மூலம் சாட்சிகளை மிரட்டுதல் ,பணம் பறிப்பு ,நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது.

 அப்பாஸ் அன்சாரியிடம் இருந்த இரண்டு செல்போன்கள் , பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் , தங்க நகைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  

wi

அப்பாஸ் அன்சாரியின்  தந்தை முத்தார அன்சாரி உத்தரப் பிரதேசத்தின் மவு தொகுதியில் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர்.  அவர் மீது 30 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   கிருஷ்ணா ஆனந்த் ராய் என்பவரை கொலை செய்த வழக்கில் அவர் 13 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.