நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது; ஸ்டாலின் முதல்வர் ஆனதற்கு நான் தான் காரணம் - சீமான்

 
see

நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.  ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு  நான் தான் காரணம் என்று கூறினார்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.  மேலும் ,  அரசியலில் நான் தான் ராஜா நாங்கள் தான் நம்பர் ஒன் என்றும் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உரையாற்றினார்.  

mk

 முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது,   எப்போதோ இந்த பாசறை தொடங்கி இருக்க வேண்டும்.  ஆனால் இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம் . பிற மொழியாளர்களுக்கு இருக்கும் அரசியல் பாதுகாப்பு, அங்கீகாரம் கூட ஆதி தமிழ் குடிகளான வண்ணார், குயவர், தச்சர் போன்ற சமூகங்களுக்கு இல்லை . நாங்கள் வந்த பின்னர் தான் தேடித்தேடி அவர்களை தேர்தலில் நிற்க வைக்க வாய்ப்பு அளித்தோம்.   இவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டிய நிலை இருக்கிறது என்றவரிடம் ,

சாந்தன்,  முருகன் உள்ளிட்ட நாலு பேரை விடுவிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்த இருக்கும் போராட்டம் குறித்து குறித்த கேள்விக்கு,  திமுக அரசு காங்கிரஸ் கட்சிக்கு பயந்து கொண்டு முருகன் ,சாந்தன் உள்ளிட்ட நாலு பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தயங்குகிறது.  35 ஆண்டுகால போராட்டம் சிறையில் இருந்து சிறப்பு முகாம் என்ற சித்திரவதை குறித்து அடைப்பதற்காக அல்ல . சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக சிறையில் வைத்து விடுங்கள் . அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் இருக்கிறது.   இந்த நாலு பேர் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி வரும் 23ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது என்றார்.

பாஜகவின் பிடீமாக செயல்பட்டு திமுகவின் ஓட்டை நாம் தமிழர் கட்சி பிரிக்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,  நான் ஓட்டை பிரிக்க வந்த ஆள் இல்லை. நாட்டை பிரிக்க வந்த ஆள்.   நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.   ஸ்டாலின் இன்று முதலமைச்சராக இருப்பதற்கு நான் தான் காரணம்.  அதற்காக நான் திமுகவின் பிடீம் ஆகி விடுவேனா என்று கேட்டவர் ,  அரசியலில் நான் தான் ராஜா.  நாங்கள் தான் நம்பர் வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னார்.