பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி – பிளவுபடும் திமுக கூட்டணி

 

பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி – பிளவுபடும் திமுக கூட்டணி

பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, தமிழகத்தில் திமுக கூட்டணிக்குள் மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மோதலின் உச்சக்கட்டமாக காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி – பிளவுபடும் திமுக கூட்டணி


பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 70 இடங்களைப் பெற்றிருந்த கூட்டணி கட்சியான காங்கிரஸ் 19ல் மட்டுமே வெற்றிபெற்றதே இதற்கு முக்கியக் காரணம். இதனால் 125 இடங்களைப் பிடித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அங்கு ஆட்சி அமைக்கிறது. ’தேஜஸ்வியின் ஆட்சி அமைக்கும் கனவில் காங்கிரஸ் இப்படி மண்ணை வாரி போட்டுவிட்டதே!’ என்கிற விமர்சனம் எல்லா பக்கங்களிலும் எழுந்துள்ளது.

பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி – பிளவுபடும் திமுக கூட்டணி


குறிப்பாக திமுகவில் காங்கிரசுக்கு எதிராக பெரும் புயலே உருவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் மூத்த நிர்வாகிகள், ‘’ கடந்த தடவைகள் போல காங்கிரசுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டாம். அப்படி கொடுப்பது, நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்துகொள்வது போன்றது. அதிகபட்சம் 20 இடங்கள் கொடுத்தால் போதும். அதற்கு ஓப்புக்கொள்ளாமல் கூட்டணியை விட்டு வெளியேறினாலும் பரவாயில்லை. இந்த விஷயத்தில் நீங்கள் உறுதியோடு இருக்க வேண்டும்’’ என சொல்லி வருகிறார்கள்.

பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி – பிளவுபடும் திமுக கூட்டணி


கூட்டணி கட்சி இப்படி தங்களுக்குக் குழி வெட்டுவது காங்கிரஸ் தரப்பையும் எட்டியுள்ளது. சத்தியமூர்த்தி பவனில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ’’பீகார் அரசியல் சூழலும், தமிழக அரசியல் சூழலும் வெவ்வேறானவை. தமிழகத்தில் காங்கிரஸ் இன்றைக்கும் உயிர்த் துடிப்போடு இருக்கிறது. எனவே பீகார் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் திமுக முடிவெடுக்குமானால் இழப்பு அவர்களுக்குத்தான். அத்தகைய சூழலில் காங்கிரஸ் தலைமையில் நிச்சயம் மூன்றாவது அணி உருவாகும். இது தொடர்பாக ரகசியமாக சில வேலைகள் நடைபெற்று வருகின்றன’’ என கொளுத்திப் போட்டிருக்கிறார்.

பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி – பிளவுபடும் திமுக கூட்டணி


கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து புதிய அணி ஒன்றை அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கமல்ஹாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ராகுல் காந்தி வாழ்த்து சொன்னதை சுட்டிக்காட்டும் காங்கிரஸ் நிர்வாகிகள், இந்த அணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் திமுக கூட்டணி வெகு விரைவில் பிளவுபடும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது