40, 50 வயதுடைய பெண்கள் பிரதமர் மோடியால் ஈர்க்கப்படுகின்றனர்... திக்விஜய சிங் சர்ச்சை பேச்சு

 
திக்விஜய் சிங்

40, 50 வயதுடைய பெண்கள் பிரதமர் மோடியால் ஈர்க்கபடுகின்றனர். ஆனால் ஜீன்ஸ் அணிந்து மொபைல் வைத்திருக்கும் பெண்கள் அவ்வளவு ஈர்க்கப்படுவதில்லை என்று பலர் என்னிடம் கூறினார்கள் என்று திக்விஜய சிங் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய சிங் போபாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், 40, 50 வயதுடைய பெண்கள் பிரதமர் மோடியால் ஈர்க்கபடுகின்றனர். ஆனால் ஜீன்ஸ் அணிந்து மொபைல் வைத்திருக்கும் பெண்கள் அவரால் அவ்வளவு ஈர்க்கப்படுவதில்லை என்று பலர் என்னிடம் கூறினார்கள் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி

திக்விஜய சிங்கின் இந்த பேச்சு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை அவமதிக்கும் வகையில் திக்விஜய சிங் பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்  அவர் சார்ந்த (காங்கிரஸ்) கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஒருவரையும் சர்ச்சைக்குரிய வகையில் திக்விஜய சிங் கருத்து தெரிவித்தார். 2013ம் ஆண்டில் திக்விஜய சிங் அப்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த மீனாட்சி நடராஜன் குறித்து கூறியதாவது:

மீனாட்சி நடராஜன்

 எங்களது கட்சி எம்.பி. மீனாட்சி நடராஜன் ஒரு காந்தியவாதி, எளிமையான, நேர்மையான தலைவர். அவர் தனது தொகுதியில் இடம் விட்டு இடம் சென்று கொண்டே இருக்கிறார். நான் அரசியலில் அனுபவமுள்ள கொல்லன். மீனாட்சி ஒரு தொடு பொருள் என்று தெரிவித்தார். அப்போது இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, திக்விஜய சிங், மீனாட்சி நடராஜன் சுத்தமான தங்கம் போன்றவர் என்று கூறி சமாளித்தார்.