“அரசியல் வியாபாரி குருமூர்த்தி அதிமுகவை அழிக்க நினைக்கிறார்”- சி.வி.சண்முகம்

 
cv shanmugam cv shanmugam

விழுப்புரம் மாவட்டம்  மேல்காரணையில் அதிமுக சார்பில்   தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "திமுக அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தேர்தல் வருகிறது, மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு திமுக அரசு ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்து பயனடைந்துள்ளதாக கூற முடியுமா எங்க போனாலும் ஆயிரம் கொடுத்தோம் இலவச பேருந்தை கொடுத்தோம் என்பார்கள். பெண்களை கேவலப்படுத்தி அவமானபடுத்தும் அரசாக உள்ளது.

முதல்வர் குறித்து அவதூறு கருத்து....சிவி சண்முகம் மீது வழக்குப்பதிவு -  தமிழ்நாடு

இலவசம் என கூறிவிட்டு மறைமுகமாக பேருந்து கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி உள்ளது. மழையில் கூட உட்காந்துவிடலாம் ஆனால் பேருந்துவில் உட்கார முடியாது அரசு பேருந்துகள் ஓட்டை, உடைச்சல் பேருந்தாக உள்ளது. ஆண்டுக்கு மூவாயிரம் பேருந்து வாங்குவதாக தெரிவிக்கிறார்கள் அப்படியென்றால் பதினைந்தாயிரம் பேருந்துகள் வந்திருக்க வேண்டும், ஆனால் இல்லை பேருந்துவிற்கு வண்ணம் லிப்டிக் போட்டுள்ளார்கள் இது போன்ற எண்ணம் கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டும் தான் வரும். நான்கரை ஆண்டுகள் மக்களை பற்றி சிந்திக்காத திமுக அரசு உங்களுடன் ஸ்டாலின் என்கிறார்கள், மக்களின் கஷ்டத்தை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி 1500 ரூபாயும் கொடுப்போம் அல்லது இரண்டாயிரமும் கொடுப்போம் அதுவும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனே வழங்குவோம். ஓபிஎஸ் என் வீட்டு வாசலில் நிற்க மாட்டார் ,கலைஞர் வீடு, ஸ்டாலின் வீடு கோபாலாபுரம் தான் தெரியும். அவர்கள் வீட்டு வாசலில் தான் போய் நிற்பார், பதவி கொடுத்தது   அதிமுக, ஆனால் போவது என்பது ஸ்டாலின் வீடு. அதிமுக நல்லா இருக்கனும் நினைப்பவர்களா இவர்கள், அதிமுக அழிய வேண்டும் என நினைப்பவர்கள்.

குரு மூர்த்தி என ஒருவர் இருக்கிறார் அரசியல் வியாபாரி. இவருக்கெல்லாம் அதிமுக வெற்றி பெறனும் என்ற எண்ணமில்லை. எப்படியாவது அதிமுக, திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. என் தைரியத்தை பற்றி பேசுவதற்கு அருகதையும் தைரியும் கிடையாது” என்றார்.