வரும் 13ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் ராகுல் காந்தி.. தனது வலிமையை காட்ட காங்கிரஸ் திட்டம்

 
நேஷனல் ஹெரால்டு வழக்கு

அமலாக்கத்துறை அலுவலகத்தில்  ராகுல் காந்தி ஆஜராகும் வரும் 13ம் தேதியன்று காங்கிரஸ் கட்சி தனது வலிமையை காட்டவும், தனது அரசியல் செய்தியை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு தெரிவிக்கவும் ஒரு பெரிய நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளது. 

நேஷனல்  ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,  மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு அண்மையில் அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில்,  வழக்கு தொடர்பான விசாரணைக்காக  ஜூன் 2ம் தேதியன்று ராகுல் காந்தி ஆஜராகும் படியும்,  ஜூன் 8 ம் தேதியன்று சோனியா காந்தியும் ஆஜராக வேண்டும் என  அமலாக்கத்துறை சம்மன் உத்தரவிட்டு இருந்தது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியபோது, ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்தார். ஆகையால் வரும் 13ம் தேதியன்று விசாரணைக்கு வரும்படி ராகுல் காந்திக்கு  அமலாக்கத்துறை புதிய சம்மன் வழங்கியது. அதேவேளையில், சோனியா காந்தி தற்போது தான் கொரோனாவிலிருந்து மீண்டு வருவதால், விசாரணைக்கு ஆஜராக கூடுதல் காலஅவகாசம் தரும்படி அமலாக்கத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது 

காங்கிரஸ்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக வரும் 13ம் தேதியன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆஜராக உள்ளார். அன்றைய தினம் காங்கிரஸ் கட்சி தனது வலிமையை காட்டவும், தனது அரசியல் செய்தியை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு தெரிவிக்கவும் ஒரு பெரிய நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் 13ம் தேதியன்று அனைத்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய தலைநகரில் (டெல்லி) இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தியுடன் அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்வார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.