வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்குக.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்...

 
ஸ்டாலின்


வடகிழக்கு பருவமழை பாதிப்பு, வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கிட வலியுறுத்தி  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தை இன்று புதுடெல்லியில்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, உள்துறை அமைச்சரை அமித்ஷாவை நேரில் சந்தித்து  வழங்கியிருக்கிறார்.

அமித்ஷா

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், “ 2021 வடகிழக்கு பருவமழையின் தமிழ்நட்டில் வரலாறு காணாத  மழை பெய்து  சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியதை ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் நினைவூட்டியிருக்கிறார். நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கான நிவாரண நிதி ரூ. 6230. 45 கோடி வழங்கக்கோரி ஏற்கனவே மூன்று முறை மனு அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அவற்றின் மூன்றாவது அலை பரவியுள்ள சூழலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முழுமையாக முடுக்கிவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா - டி.ஆர்.பாலு

  மேலும் இதற்கான பெரும் நிதி தேவை மாநில நிதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய அதேவேளையில் கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில  நிதியிலிருந்து  இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

எனவே வெள்ளை தங்களுக்கான சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிரூபிக்கப்பட்டால் அது மாநில மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு விரைந்து நிதிஉதவி அளிப்பதற்கு தாங்கள் உதவிட வேண்டும் என்றும்,  மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கடிதம்