நானும், மோடி ஜியும் நதியின் இருபக்கங்கள் போன்றவர்கள்... பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த பூபேஷ் பாகல்

 
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரிசி, பணம் அனுப்பிய காங்கிரஸ் மாணவர் பிரிவு… பூபேஷ் பாகல் தகவல்

நானும், மோடி ஜியும் நதியின் இருபக்கங்கள் போன்றவர்கள் என்று பா.ஜ.க.வுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கடந்த சில தினங்களுக்கு முன், ராய்பூரில் அமர் ஜவான் ஜோதி கட்டப்படும் என்று அறிவித்தார். இது தொடர்பாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் பிரிஜ்மோகன் அகர்வால் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் அடிச்சுவடுகளை பூபேஷ் பாகல் பின்பற்றுகிறார் என்று தெரிவித்தார்.

மோடி

பா.ஜ.க. தலைவரின் கருத்து பூபேஷ் பாகல் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பூபேஷ் பாகல்  கூறியதாவது: நானும், மோடி ஜியும் நதியின் இருபக்கங்கள் போன்றவர்கள். காங்கிரஸின் சித்தாந்தம் காந்தியால் ஈர்க்கப்பட்டது. அது சகோதரத்துவம், உண்மை மற்றும் அகிம்சை பற்றியது. மோடிஜியின் சித்தாந்தம் சாவர்க்கர் மற்றும் கோட்சேவால் ஈர்க்கப்பட்டது,  அது வன்முறை, சதி மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு மதிப்பிலாதது. காங்கிரஸூம், பா.ஜ.க.வும் ஒரு நதியின் இரு பக்கங்கள் போன்றது.

காங்கிரஸ்

தியாகத்துக்கும், தியாகிக்கும் தொடர்பில்லாதவர்களால் அமர் ஜவான் ஜோதியின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாது. தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதியை சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் கொண்டு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.