கையை உடைப்பேன் என்பதும் கருத்து சுதந்திரம்தான் - சீமானுக்கு சுபவீ பதிலடி

 
susu

கலைஞரின் பேனாவை உடைப்பேன் என்று சொல்லும்  சீமானின் கையை உடப்பேன் என்பதும் கருத்து சுதந்திரம்தான். பேனாவை உடைப்பேன்  என்று சொல்வது கருத்து சுதந்திரம் என்றால் கையை உடப்பேன் என்று சொல்வதும் கருத்து  சுதந்திரம்தான் என்று சீமானுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் திராவிட இயக்க தமிழர் பேர வை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன்.        

su

 மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருக்கிறது திமுக அரசு.  இதற்காக நிதி ஒதுக்கி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது திமுக அரசு.  கடலில் , அரசு செலவில் பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.  திமுகவிடம் என்ன பணம் இல்லையா?  சொந்த பணத்தில் அண்ணா அறிவாலயத்தில் வைக்க வேண்டியதுதானே ? மெரினா கடலில் எதற்காக அவ்வளவு உயர பேனா சிலை வைக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 இதில் ஒரு படி மேலே சென்று,  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,   மெரினாவில் பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என்று சொல்லி வருகிறார்.  இதற்கு திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் , சீமான் பேனா சின்னத்தை உடைக்கும் வரைக்கும் எங்கள் கை பூப்பரித்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்த போது,   இந்த விவகாரம் குறித்து பேசினார்.   பேனாவை வைத்தால் உடைப்பேன்.    உடைப்பியா சீமான் என்று கேட்டால் ஆமாம் உடைப்பேன்.  இதையே ஓயாமல் கேட்டால் மண்டையை உடைப்பேன் என்று ஆவேசப்பட்டார்.  நீங்க அதிகார திமிரில் ஆட்டத்தை போட்டு பேனாவை வைத்தால் அதிகாரம் ஒரு நாள் எனக்கு வரும்.  அப்போது எந்த அடையாளமும் இங்கே இருக்காது என்று எச்சரித்தார்.                                                                                                                                        

vee

இந்த நிலையில் கருத்து சுதந்திரம் குறித்து பேசிய சுப. வீரபாண்டியன் , சீமான்  கருத்துக்களுக்கு பதிலளித்தார்.  பேனாவை உடைப்பது கருத்த சுதந்திரம் என்றால் பேனாவை உடைத்தால் கையை உடைப்பேன் என்று சொல்வதும் கருத்து சரித்திரம் தான் என்று சொன்னார் . 

அவர் மேலும்,  உடைப்பேன் என்று சொல்லிவிட்டு அதை கருத்து சுதந்திரம் என்று வேறு சொல்லிக் கொள்கிறார் . ஆட்சிக்கு வந்து உடைப்பேன் என்று விளக்கம் அளிக்கிறார்.  அப்படி என்றால் அது நடக்கப் போவதில்லை.  அதற்கு முதலில் டெபாசிட் வாங்க வேண்டும்.  ஒரு தொகுதியில் டெபாசிட் வாங்காத உங்களுக்கு இவ்வளவு பேச்சு இருக்கும் என்றால் ஆளுங்கட்சியான எங்களுக்கு எவ்வளவு பேச்சு இருக்கும் என்று சொன்னவர்,

 வெளிப்படையாகவே சொல்கிறேன்.  யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம்.  திமுகவினர் இன்னமும் உணர்ச்சி குறைந்து போய்விடாமல் இருங்கள். அண்ணாவை இடியட்  என்றும் ,  கலைஞரின் பேனாவை உடைப்பேன் என்று சொல்வதும் அதை கண்டு திமுக தோழர்கள் எழுந்தால் , உங்களின் பேச்சுகள் இனி ஒருநாளும் இருக்காது என சீமானுக்கு எச்சரித்துள்ளார்.