நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி

 
Annamalai eps ops

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக- பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

BJP chief Annamalai calls on OPS, EPS - DTNext.in

இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,ஜெயக்குமார்,அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், பாஜக சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை,தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னாள் மாநில தலைவர் சி. பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சரியாக மதியம் 12.40 மணிக்கு துவங்கிய கூட்டணி பேச்சுவார்த்தை மாலை 4 மணி வரை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றது, எங்களுக்கு எந்தெந்த இடங்கள் வேண்டும் என அவர்களிடம் கேட்டு உள்ளோம். அவர்கள் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசிவிட்டு முடிவெடுப்பார்கள். இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிவில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை அடுத்தகட்ட பேச்சு வார்த்தைகள் தொடரும். அதிமுக சிறந்த எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. திமுகவின் தவறுகளையும் மக்களின் பிரச்சனைகளையும் தொடர்ச்சியாக அதிமுக மக்கள் மன்றத்தில் பேசி வருகிறாது. நகர்புறங்களில் பாஜக வலுவாக உள்ளது.

தமிழக அரசை பாராட்டி பலமுறை ஆளுநர் பேசியுள்ளார் அப்போதெல்லாம் விமர்சிக்காத நபர்கள் தற்போது பேசியுள்ளனர்,இதனை பாஜக கண்டிக்கிறது,மக்களும் கண்டிக்க வேண்டும்” எனக் கூறினார்.