சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க பாஜக முயற்சியா?- அண்ணாமலை

 

சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க பாஜக முயற்சியா?- அண்ணாமலை

சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க முயற்சி செய்யவில்லை என பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற பாஜக நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம். சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க முயற்சி செய்யவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. சசிகலா அதிமுகவில் சேருவாரா என்பதை பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்

சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க பாஜக முயற்சியா?- அண்ணாமலை

ஸ்டாலின் செயலால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும் ஒருஒரு செயலில் ஈடுபடுகிறார். ஒரு மாதம் கிராம சபை என சொன்னார். இன்னொரு மாதம் சைக்கிளில் வலம் வந்தார். இந்த மாதம் விடியல் தர போறேன் என சொல்லி வருகிறார். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி வருகிறார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. பெண்கள் பாஜகவின் பக்கம் உள்ளனர்” எனக் கூறினார்.