கோச்சிக்க கூடாது - கூல் பண்ணும் காயத்ரி

 
க்

கட்சிக்கு உள்ளேயே இருந்து கொண்டு கடுமையாக தலைமையை விமர்சித்து வந்த காயத்ரி ரகுராம்,  கட்சிக்கு வெளியே வந்து முழுநேர வேலையாக தலைமையை, பாஜக மாநில  தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார்.  பல நேரங்களில் அவர் அண்ணாமலையை ஒருமையில் விமர்சித்து வருகிறார்.

2ஜி ஊழல் பற்றி அனைவருக்கும் தெரியும், முந்தைய திமுக ஆட்சி பற்றி அனைவருக்கும் தெரியும். இப்போது ஏன் கதையை மாற்றுகிறீர்கள்? ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக மற்றும் அனைவரின் சொத்து ஊழல் பட்டியலை கொடுக்க போகிறீர்கள்.  அது தான் உங்கள் கதை.  பிஜிஆர் ஊழல், ஜி ஸ்கொயர் ஊழல் வெளியிடுவீர்களா? அனைத்துக் கட்சி தலைவரின் சொத்து ஊழல் பட்டியலையும் சேர்த்து வெளியிடுவீர்களா?

ய்

மோசடிகள் ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாப் போன்றவையும் பற்றி அம்பலப்படுத்து. அதானி பற்றி ராகுல் காந்தியின் சமீபத்திய கேள்வி உட்பட வெளியிடுவீர்களா? உன் டகால்டி வேலையை காட்டாதே என்று ஒருமையில் விமர்சிப்பதை கண்டு கொதித்தெழுந்து அவரது ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.   ஆனால் புகாரை வாபஸ் பெற்று விடுங்கள் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டதை அடுத்து பாஜக வழக்கறிஞர் அணி பிரிவு புகாரை வாபஸ் பெற்றிருக்கிறது.  

இதயும் கிண்டலடித்துள்ளார்; கடுமையாக விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.  ‘’அண்ணாமலை, கால் முன்னோக்கி அல்லது பின்னோக்கி வைக்க வேண்டாம். தயவு செய்து ஒரு முடிவுக்கு வாருங்க.  அண்ணாமலை, நான் உன்னை துஷ்பிரயோகம் செய்தேன், மிரட்டுகிறேன், உன்னை பிளாக்மெயில் செய்தேன் என்று  ஜிஎஸ் மணி அவர்களிடம் அழுதாயா? நான் எப்போது செய்தேன்? உங்கள் நகைச்சுவை கருத்துக்களுக்காக நான் சிரித்துவிட்டு என் நகைச்சுவை கருத்துகளை தெரிவித்தேன். அவ்வளவுதான்.. ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நீயும் சினிமா துறையைப் பற்றி பேசியுள்ளீர்கள்.. கருத்து சுதந்திரம் தானே.. கோச்சிக்க கூடாது'’என்கிறார்.