எடப்பாடி பழனிசாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துள்ளார்- புகழேந்தி

 
pugalendhi pugalendhi

கொடநாடு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த வழக்கிலும் கைது ஆகாமல் இருக்கிறார் என்று மயிலாடுதுறையில் அதிமுக கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 


மயிலாடுதுறையில் அதிமுக கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுதொகுப்பில் அரிசி, சர்க்கரை, திராட்சை, முந்;திரி, ஏலக்காய், கரும்புதுண்டு பணம் ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. ஒபிஎஸ் 21ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் போட்டதும் போட்டியாக இபிஎஸ் 27-ஆம் தேதி ஒரு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். எதற்காக அந்த கூட்டத்தை நடத்தினார் என்று அவருக்கே தெரியவில்லை.  அதிமுகவை காப்பாற்றுகின்ற இடத்தில் ஒபிஎஸ் இருக்கிறார். 

12 மணி நேரமா பால் காய்ச்சினார்..?' - அ.தி.மு.க-விலிருந்து புகழேந்தி  நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?| What was the background behind the removal of  Pugalendhi from the AIADMK?


அதிமுகவை உடைத்து இபிஎஸ் என்ன லாபம் காணுகிறார் என்று தெரியவில்லை. பழனிச்சாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த வழக்கிலும் கைது ஆகாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். கொடநாடு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் அவர்மீது நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜர் மீது கொடுக்கப்பட்ட பருப்பு கொள்முதல் ஊழல் குறித்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரேஷன் கடைகளுக்கு சர்க்கரை வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி திமுக ஆட்சி அமைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று திமுக தொண்டர்கள் அனைவரும் கேட்கின்றனர்.

 எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சுதந்திரமாக சுற்றிதிரிந்து கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிடும் போதுதான் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று முடிவு எடுப்பார்கள். அந்த சூழ்நிலை ஏற்படும்போது நேரம் இருக்காது. அதுவரை சின்னம் குறித்து எதுவும் எடுக்கமாட்டார்கள். எந்த புகார் வந்தாலும் வாங்கிவைத்து கொள்வார்கள். தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்காது. நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் ஆணையம் செயல்படும். ஒ.பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்தபோது கட்சி நிதி பாதுகாக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிமுக கட்சி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

 எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டு அரசியல் நடத்துபவர்கள் சேர்ந்து செயல்படலாம் என்று ஒபிஎஸ் கூறியுள்ளார். அதுபோல் இணைந்து செயல்பட்டால் நல்லதுதான். தேர்தல் வந்தால் அதிமுக கட்சி பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வந்திருக்காது. பன்னீர்செல்வம் என்ற தலைவர் இல்லை என்றால் அதிமுக சர்வாதிகாரியிடம் கட்சி சென்றுவிடும். ஒபிஎஸ், இபிஎஸ் போட்டி போட்டுக்கொண்டு மாநாடுகள் நடத்த வேண்டியதில்லை. இபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் பார்ப்போம். சசிகலா, டிடிவி, இபிஎஸ், ஒபிஎஸ் அனைவரும் ஒன்றிணைந்தபின்புதான் யார் தலைமை என்பதை முடிவு செய்வோம் அதுவரையில் நாங்கள் ஒபிஎஸ் தலைமையைத்தான் இருப்போம் என்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாட்களை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்றார்.