மூக்கணாங்கயிறே இல்லாத இலாகா! துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை

 
டு

இந்த மாதிரி மூக்கணாங்கயிறே இல்லாத இலாகாவை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் சொன்னபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டமன்றத்தில் வினா விடையும், துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதமும் நடந்து வருகின்றது.  நீர்வளம், கனிமங்கள், சுரங்கங்கள் துறை அமைச்சர் துரைமுருகன், இதில் பங்கேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.  புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

ஊ

அலகாபாத்தில் ஒரு ஆறு ஓடுகின்றது. அந்த ஆறுக்கு  பேரு திரிவேணி சங்கமம்.  யமுனையும் கங்கையும் ஒன்றாக ஓடும். இன்னொரு ஆறு சரஸ்வதி ஆறு.  அது கண்ணுக்கு தெரியாது.   அந்த மாதிரிதான் தொழில்துறையும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை மட்டும்தான் கண்ணுக்கு தெரிகின்றது என்ற அமைச்சர் துரைமுருகன்,

கனிம வளத்துறை பற்றி சபாநாயகருக்கே தெரியவில்லை.   சட்டப்பேரவையில் உள்ளவர்களுக்கும் தெரியவில்லை.  துறையின் செயலாளருக்கும் தெரியவில்லை.  ஒரே ஒரு ஆளுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது. அவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி.  அவர்தான் கொஞ்ச நாள் அந்தத் துறையை வைத்திருந்தார்.  அதனால் தான் அவர் மட்டும் பேசினார்.  அவர் பேசியது மகிழ்ச்சி என்று சொன்னவர்,

 இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பொதுப்பணித்துறை, சட்டத்துறை என்று அனைத்து இலாகாக்களையும் வைத்திருந்தேன்.  ஆனால் இந்த மாதிரி ஒரு மூக்கணாங்கயிறே இல்லாத இலாகாவை நான் பார்த்ததே இல்லை.  இதை எப்படித்தான் வைத்திருந்தார்களோ? என்னதான் செய்தார்களோ தெரியவில்லை.  அது இலாகா மாதிரியே தெரியவில்லை.   அதை கட்டி காப்பதே எனக்கு பெரிய வேலையாகி விட்டது என்று சொன்னதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தொடந்து அதுகுறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,   எப்படியோ மூக்கணாங்கயிறு போட்டு இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து விட்டேன்.  பள்ளத்தில் இருந்த இந்த துறையை இப்போது சமதளத்திற்கு உயர்த்திக் கொண்டு வந்து விட்டோம்.   இன்னும் சில ஆண்டுகளில் இந்த துறையை கோபுரமாக உயர்த்தி காட்டி விடுவோம் என்றார்.