நடிகைகள் பின்னால் சுற்றியவர், நயன்தாரா கிடைக்கவில்லை என்றதும் தற்கொலைக்கு முயன்றவர் அமைச்சரா? மாஜி அமைச்சர் சிவி சண்முகம் கடும் தாக்கு

 
n

யார் இந்த உதயநிதி ஐந்து வருடத்திற்கு முன்னால் என்ன  செய்தார் தெரியுமா? என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்தார்.

 சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.  இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

 இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அடுத்த நாட்டார் மங்கலத்தில் திமுக அரசை கண்டித்தும் மின்சாரக் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு போன்ற விலைவாசி உயர்வுகளை கண்டித்து அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நேற்று பங்கேற்றார். 

cv

 அப்போது பேசிய அவர்,   தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.   பசங்களை ரூமில் தனியாக இருக்க விடாதீர்கள். ஏனென்றால் இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஒன்றரை ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் கஞ்சா அமோகமாக விற்பனையாகி வருகிறது. பள்ளி கல்லூரியில் கஞ்சா அமோகமாக விற்பனையாகி வருகிறது.   இதயும்ம் தாண்டி போதை ஊசி வந்து கொண்டிருக்கிறது.   ராமேஸ்வரம் பகுதியில் 301 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது . தமிழ்நாடு முழுவதும் கஞ்சா அரசு செயல்பட்டு வருகிறது.  

அதனால் தயவு செய்து தாய்மார்களே பெரியோர்களே உங்கள் குழந்தைகளை முறையாக கண்காணித்து வாருங்கள் . பள்ளி கல்லூரிக்கு அருகே ஏதாவது சந்தேகப்பட்ட நபர்கள் தெரிந்தால் இருந்தால் உங்களால் பிடித்து தர முடியவில்லை என்றாலும் யாருக்காவது முறையாக தகவல் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டார் . 

அதன் பின்னர் அவர் உதயநிதி ஸ்டாலின் விவகாரத்திற்கு வந்தார்.  குடும்ப அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.    உதயநிதி என்ன செய்திருக்கிறார்.  இந்த நாட்டு மக்களுக்கு அவர் என்ன செய்து செய்து செய்தார் என்பதை விடுங்கள்.  திமுகவிற்கு அவர் என்ன செய்தார்? சிறைக்கு சென்றிருக்கிறாரா? போராட்டத்தில் கலந்து இருக்கிறாரா? யார் இந்த உதயநிதி.   5 ஆண்டுகளுக்கு  முன்னால் நடிகைகளுக்கு பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார் இந்த  உதயநிதி.  நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரைக்கும் சென்றவர் இன்றைக்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி என்று சொல்கிறார்கள்.  வெட்கமாக இருக்கிறது.  இதுதான் சுயமரியாதை இயக்கமா?  திமுகவின் சுயமரியாதை இப்போது உதயநிதியின் காலில் போட்டு மிதிக்கப்பட்டிருக்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.