பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி சசிகலாவுடன் திடீர் சந்திப்பு

 
sasikala sasikala

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி சசிகலாவை திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக தமிழகம் வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் சந்தித்து பேசினார்

சந்திப்புக்கு  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி, “நட்பு ரீதியாக சசிகலாவை சந்தித்தேன். மரியாதை நிமித்தமான சந்திப்பு. சென்னை வந்தால் சசிகலாவை எப்போதும் சந்திப்பேன்,எங்கள் நட்பு எப்போதும் தொடரும், அவங்க வீட்டு பொண்ணு மாதிரி நான். ஜெயலலிதா, சசிகலா இருவரும் தனக்கு பிடிக்கும். தமிழகத்திற்கு வந்த பணிகள் அனைத்தும் முடிந்ததால் இறுதியாக சசிலாவை இன்று சந்தித்தேன்

அரசியல் ரீதியாக சசிகலாவிடம் ஏதும் பேசவில்லை, நட்பு ரீதியான சந்திப்பு மட்டும். அரசியலில் யார் யார் நல்லது செய்தார்களோ அவர்களுக்கு நல்லது நடக்கும், தமிழகத்தை பொறுத்தவரை ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் நல்லது நடந்திருக்கும். அரசியலில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் கஷ்டப்பட்டு வந்தவர்கள், விரைவில் நல்லது நடக்கும் அரசியலில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம், அது நல்லதே நடக்கும்.” என தெரிவித்தார்.