நாகூசும் வார்த்தைகள்.. ஆ. ராசாவை கண்டிக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது -ஓபிஎஸ்

 
o

இந்துக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ள ஆ. ராசாவை கண்டிக்காதது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகும் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

 இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கின்ற சூழ்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்துக்களை கொச்சைப்படுத்தி பேசுவதை சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.  அப்படித்தான் திமுக துணை பொதுச்செயலாளரும்,  நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருக்கின்றார்.  இந்துக்களை கொச்சைப்படுத்துகின்ற வகையில் தகாத வார்த்தைகளை,   நாகூசும் வார்த்தைகளை,  மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரான வார்த்தைகளை,  மத நல்லினத்திற்கு எதிரான பேச்சு அவர் பேசி இருக்கிறார்.

r

 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக்கொண்டு மக்களவை உறுப்பினராக பதவி வகித்து கொண்டிருக்கின்ற ஒருவர்,   மத்திய அமைச்சராக பதவி வகித்த ஒருவர் , இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தினை இழிவு படுத்துகின்றதற்கு சமம் ஆகும் என்கிறார்.

 தொடர்ந்து ஓபிஎஸ்,   இதைப்பற்றி தமிழ்நாடு முதலமைச்சர்  வாய் திறக்காமல் இருப்பது திமுக இதை ஊக்குவிக்கிறதோ என்கிற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது.    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது அவர் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் சென்றது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்.  

மேலும்,  தமிழ்நாட்டில் யார் எந்த மதத்தை இழிவு படுத்தி பேசினாலும் அதற்கு எது எதிராக குரல் கொடுக்கும் இயக்கமாக அதனை கண்டிக்கும் இயக்கமாக அதிமுக விளங்கும்.  அந்த வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆ.ராசாவின் பேச்சிருக்கும் அதனை கண்டிக்காத திமுகவிற்கும் அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து அது குறித்து ஓபிஎஸ்,    திமுகவில்  இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்று சொல்லும் முதல்வர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணான வகையில் இந்துக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருக்கும் ஆ. ராசாவின் கூற்றைக்  கண்டிக்காதது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய ஒன்று. அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் முதலமைச்சர் என்பதையும் மத நல்லிணக்கத்திற்கு எதிராக இது போன்ற செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வரின் கடமை என்பதையும் கருத்தில் கொண்டு ஆ. ராசாவின் கூற்றை கண்டிப்பதோடு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.  ஒரு மதத்திற்கு எதிரான பேச்சுக்கள் இனி வரும் காலங்களில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தி இருக்கிறார்.