5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.. மத்திய அரசை தாக்கிய பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி

 
வருண் காந்தி

ஏழைகளுக்கு 5 கிலோ ரேஷன் கொடுத்ததற்கு  நன்றி எதிர்பார்க்கும் அவை,  5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வரையிலான ஊழல் பண விலங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சொல்கிறது என்று மத்திய அரசை பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி தாக்கினார்

பணவீக்கம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் பேசுகையில், இலங்கை, வங்கதேசம், பூடான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வேலையிழப்பு ஏற்பட்டு வரும் வேளையில், நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு  இலவசமாக ரேஷன் வழங்கப்படுவதால்  பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதா கொண்டு வர வேண்டும்.. மத்திய அரசுக்கு நிஷிகாந்த் துபே வேண்டுகோள்

இலவசமாக ரேஷன் வழங்குவதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. கூறியதை, கடந்த ஐந்தாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடன்கள் தொகையுடன் தொடர்புப்படுத்தி மத்திய அரசை வருண் காந்தி விமர்சனம் செய்துள்ளார். பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி டிவிட்டரில்,  மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கே காரத், வாராக்கடன் தொடர்பாக தாக்கல் செய்த தரவுகளை பதிவேற்றம் செய்து இருந்தார்.

வருண் காந்தி டிவிட்டரில் பதிவேற்றம் செய்து இருந்த தரவு

மேலும், ஏழைகளுக்கு 5 கிலோ ரேஷன் கொடுத்ததற்கு  நன்றி எதிர்பார்க்கும் அவை,  5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வரையிலான ஊழல் பண விலங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சொல்கிறது. இலவச ரேவடி எடுப்பவர்களில் மெஹூல் சோக்சி மற்றும் ரிஷி அகர்வால் பெயர்கள் முதலிடத்தில் உள்ளன. அரசு கருவூலத்தில் யாருக்கு முதல் உரிமை? என பதிவு செய்து இருந்தார்.