திமுக இளைஞரணியை பலப்படுத்தும் இளைஞர்களுக்கு உரிய அங்கீகாரம்- உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhi

திமுக இளைஞரணியை பலப்படுத்தும் இளைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் தமிழக முதல்வரே இளைஞர் அணியிலிருந்து வந்தவர்தான் என தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக இளைஞர்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உற்சாகப்டுத்தினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவில் இல்லம் தேடி இளைஞர்களை சேர்க்கும் பனியன் கீழ் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இதில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் வீடு வீடாக சென்று திமுகவில் இளைஞர்களை சேர்க்கும் நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  கலந்துகொண்டு உறுப்பினர்களை சேர்த்தார். அப்போது உடன் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

பின்னர் தொண்டர்களிடம் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் இதுவரை தான் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற பின் சுமார் 25 லட்சம் இளைஞர்களை திமுகவில் சேர்த்துள்ளதாகவும் அந்த பணி தொடர்ந்து நடைபெறும் அதன் அடிப்படையில் வீடு வீடாக சென்று ஒவ்வொரு இளைஞர்களையும் திமுகவில் சேர்க்கும் பணியில் இளைஞர் அணியினர் ஈடுபட வேண்டும் திமுகவில் இளைஞர்களை சேர்க்கும் பணியில் ஈடுபடும் இளைஞரணி தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

 ஏனென்றால் நமது தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களே இளைஞரனியில் இருந்து தான் முதல்வர் பொறுப்பிற்கு வந்துள்ளார் எனவே திமுக இளைஞர்கள் கடும் உழைப்பில் ஈடுபட வேண்டும் மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு தேர்தல் வாக்குறுதிகளில் கூறியவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 


தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவில் இல்லம் தேடி இளைஞர்களை சேர்க்கும் பனியன் கீழ் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இதில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் வீடு வீடாக சென்று திமுகவில் இளைஞர்களை சேர்க்கும் நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  கலந்துகொண்டு உறுப்பினர்களை சேர்த்தார்.

அப்போது உடன் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  பின்னர் தொண்டர்களிடம் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் இதுவரை தான் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற பின் சுமார் 25 லட்சம் இளைஞர்களை திமுகவில் சேர்த்துள்ளதாகவும் அந்த பணி தொடர்ந்து நடைபெறும் அதன் அடிப்படையில் வீடு வீடாக சென்று ஒவ்வொரு இளைஞர்களையும் திமுகவில் சேர்க்கும் பணியில் இளைஞர் அணியினர் ஈடுபட வேண்டும் திமுகவில் இளைஞர்களை சேர்க்கும் பணியில் ஈடுபடும் இளைஞரணி தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

 ஏனென்றால் நமது தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களே இளைஞரனியில் இருந்து தான் முதல்வர் பொறுப்பிற்கு வந்துள்ளார் எனவே திமுக இளைஞர்கள் கடும் உழைப்பில் ஈடுபட வேண்டும் மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு தேர்தல் வாக்குறுதிகளில் கூறியவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.