இதனால்தான் நயினார் நாகேந்திரன் எனக்கு அழைப்பு விடுத்தார்- சசிகலா

 
sஆஅ

சசிகலா பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம்.  சசிகலா பாஜகவில் சேர்ந்தால் பாஜகவிற்கு அது உறுதுணையாக இருக்கும் என்று சொன்ன நயினார் நாகேந்திரன் சொன்னதற்கு சசிகலா பதிலளித்திருக்கிறார்.  

சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும் .  அதிமுகவில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் பாஜகவில் சேர்ந்தால் சசிகலாவை வரவேற்போம்.   அப்படி சசிகலா பாஜகவில் சேர்ந்தால் பாஜகவிற்கு அது உறுதுணையாக இருக்கும் .  இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தார் தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் .   புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ன

இதனால் சசிகலா பாஜகவில் இணைகிறார் என்று செய்தி பரவ,  அதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியபோது,  சசிகலாவை பாஜகவில் இணைப்பது குறித்த நயினார் நாகேந்திரன் கருத்து அவரது சொந்த கருத்து.  அது பாஜகவின் கருத்து இல்லை . பாஜகவை பொறுத்தவரையிலும் கட்சியில் யார் வேண்டுமானாலும் இணையலாம்.  ஆனால் குறிப்பிட்ட சிலர் இணைவது குறித்து டெல்லி தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.  

இதையடுத்து நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசியபோது,  சசிகலா குறித்து நீங்கள் சொன்னது பாஜக கருத்தா? உங்கள் கருத்தா? என்று கேள்வி எழுப்பிய போது,  பாஜக வளரவேண்டும் என்று சொன்னால் சசிகலா பாஜகவில் இணைந்தால்  பாஜகவிற்கு வலுவாக இருக்கும் .  இது பாஜகவின் கருத்து அல்ல என் தனிப்பட்ட கருத்து என்றார்.  அவர் மேலும்,  சசிகலா எந்தக் கட்சிக்கு சென்றாலும் அவருக்கென்று ஒரு சமுதாயப் பின்னணி இருக்கிறது. ஜெயலலிதாவுடன் பல காலம் பொதுவாழ்க்கையில் இருந்திருக்கிறார்.  அதனால் சசிகலாவிற்கு என்று ஒரு செல்வாக்கு இருக்கிறது.  நிச்சயம் சசிகலா எந்த கட்சிக்கு சென்றாலும் அந்த கட்சிக்கு அது வலுவாக இருக்கும் என்று சொன்னார்.

னாஅ

இந்நிலையில்,  கெடிலம் ஆற்றில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார் .  அப்போது செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர்.  செய்தியாளர்களிடம் சசிகலா பேசியபோது,   நயினார் நாகேந்திரன் சொன்னது குறித்த கேள்விக்கு,   ’’பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் என்னை பாஜகவில் இணையலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.  அதை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால்,  அவர் அந்த கட்சிக்கு நன்றி உள்ள மனிதராக இருப்பதாக நினைக்கிறேன்’’ என்று பதிலளித்துள்ளார்.