‘’ஒரு கட்சிக்கு கூட துப்பில்லாதது தான் கேவலம்! அரசியல் தலைவர்களின் மௌனம் வெட்கக்கேடு!’’

 
h

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. சிவனை இகழ்ந்தவனை தமிழக அரசே உடனே கைது செய் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

 யூடியூபர் ஒருவர் சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்தும் விதமாக பேசி இருக்கும் நிலையில்,  சிதம்பரம் நடராஜரை கொச்சைப்படுத்தி  வீடியோ வெளியிட்டிருக்கும் நிலையில் அவர் இந்த கோரிக்கையினை முன் வைத்திருக்கிறார்.

c

இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  ‘’மத கோட்பாடுகள் மற்றும் இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர் சிலர்! ஆளும் கட்சியின் ஆசி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதுபோன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது?’’ என்று கேட்கிறார்.

சிவ பெருமான் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை செய்த ஒரு தரங்கெட்ட பதர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கூட வியப்பளிக்கவில்லை. ஆனால், அந்த  அயோக்கியனை கண்டிப்பதற்கு பாஜகவை தவிர்த்து தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு கூட துப்பில்லாதது தான் கேவலம். அரசியல் என்கிற தொழிலை பாதுகாக்க அரசியல் தலைவர்களின் மௌனம் வெட்கக்கேடு என்று கடுமையாக சாடுகிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. . 

bu

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய அந்த கொடியவனை கைது செய்ய காவல்துறை தயங்குவதேன்? இது தான் பேச்சுரிமை என்றால், இனி யார் வேண்டுமானாலும் எந்த கடவுள் குறித்தும் தரம் தாழ்ந்து பேசும் முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உருவாகும் என்று எச்சரிக்கிறார் நாராயணன். 

தமிழ்நாடு காவல்துறை  தன் கடமையை செய்ய வேண்டும்.  தமிழக முதல்வர் ஸ்டாலின் இது போன்ற களவாணிகளை, புறம்போக்குகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.