அந்த மர்ம கார் - அமித்ஷா அதிர்ச்சி

 
aம்

மர்ம காரினால் அமித்ஷாவின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. இது தெலுங்கானா பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  அந்த கார் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்திருக்கிறது.  ஏற்கனவே மகாராஷ்டிராவில் இப்படித்தான் அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிரா சென்றிருந்தபோது அங்கே பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒருவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அடையாள அட்டையுடன் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.   அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அந்த நபர் மீது சந்தேகம் இருந்தது.   அமித்ஷா விழாவை முடித்துக் கொண்டு டெல்லி சென்றபின் அந்த நபர் குறித்து மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அச்

 போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஹேமந்த் பவர் என்பதும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு எம்பியின் உதவியாளர் என்பதும் தெரிய வந்தது.   அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.   பாதுகாப்பு அதிகாரிகள் போல் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு எம் பி யின் உதவியாளர் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததார்  இந்த நிலைமையில் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு கட்சி பிரமுகரின் கார் அமித்ஷாவின் பாதுகாப்பு குளறுபடி என்ற பாதுகாப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மாலை முதல் தெலுங்கானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். நேற்று அவர் ஐதராபாத் அருகே பேகம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றார். 
அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு அந்த ஓட்டலுக்கு உள்ளே நுழைய முயன்றபோது, வழியில் இடையூறாக மர்ம கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு அங்கேயே நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த மர்ம காரை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். அந்த கார் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டு உள்ளது. 

இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் அமித்ஷாவின் வாகன பாதையில் காரை நிறுத்தி அவரது பாதுகாப்பில் குளறுபடியை ஏற்படுத்தியுள்ள விவகாரம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.