டெண்டர் முறைகேடு புகார் -இபிஎஸ் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

 
எ

 

 டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

 நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்திற்கு எதிராக 1.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

 அறப்போர் இயக்கத்தின் செயல் தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன்,  மன உளைச்சலும் ஏற்படுத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி தான் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு என்று அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து உள்ளார்.   இந்த வழக்கு  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக கடந்த 30ம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது   வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ர்

 அறப்போர் இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,  எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் வழக்கறிஞரை வாதிட உத்தரவிட்டார்.  எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வாதிட்ட போது,   எதன் அடிப்படையில் டெண்டர்  ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு.   இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.   மேலும் ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்து கொள்ளவில்லை.  டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள் எதுவும் டென்டருக்கு எதிராக வழக்கும் தொடரவில்லை என்றும் வாதிட்டார். 

 மேலும் , தனது புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவும்,  மலிவான விளம்பரத்திற்காகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்று வாதிட்டார்.  தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் ஊடகங்களில் குற்றச்சாட்டுகளை வைப்பதே தவறு.  முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கிறது என்று வாதித்தார் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்.

 லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் சமூக வலைத்தளங்களில் ஒரு குற்றச்சாட்டை சொல்வதற்கு முன்பாக அதை உறுதிப்படுத்த வேண்டும்.  சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நபர் குறித்து அவதூறு கருத்துகளை சொல்லிவிட்டு அதற்கு இழப்பீடு கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதது என்றும் தெரிவித்தார்.  ஆதாரம் இல்லாமல் இது போன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக சொல்வது மான நஷ்ட உட்பட்டது என்பதால் தன்னைக் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

 இதன் பின்னர் விசாரணை  ஒத்தி வைத்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.

அதன்படி இன்று நடந்த விசாரணையில்,  எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்று அறப்போர் இயக்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது .  இதை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.