இபிஎஸ் செய்த டெண்டர் முறைகேடுகள் - ஆதாரங்களை காட்டிய அறப்போர் இயக்கம்

 
eh

 எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது அறப்போர் இயக்கம்.

 கடந்த 2016 - 2021 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர், கோவை ,சிவகங்கை மாவட்டங்களில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் 692 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்திருப்பதாக நெடுஞ்சாலை துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தலைமைச் செயலாளர்,  நெடுஞ்சாலைத்துறைம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி என்று புகார் அளித்திருந்தது .

h

இது குறித்து வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தது.   இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மன உளைச்சலும் ஏற்படுத்தி இருப்பதாக சொல்லி மான  நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் , இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக வழக்கு வழக்கு தொடர்ந்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த வழக்கில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.   அந்த பதில் மனுவில்,  விதிமுறைகளை பின்பற்றாமல் டெண்டர் வழங்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.  ஊழல் மற்றும் முறைகேடில்  ஈடுபட்டுருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகாரை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டது அவதூறு இல்லை என்று அறப்போர்  இயக்கம் அந்த மனுவில் இருக்கிறது.

 டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் எதேச்சதிகார போக்கும் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டு இருப்பதாகவும் அந்த நினைவில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. புகார் அளித்ததற்காக அவதூறு வழக்கு தொடர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது .  பல உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால் மான நஷ்ட ஈடு கோரிய வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இந்த  வழக்கின் மறுவிசாரனை  ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.