நரேந்திர மோடியை நாட்டை விட்டு வெளியேற செய்வோம்.. நான் ஒரு புலி.. கே.சந்திரசேகர் ராவ் ஆவேசம்

 
மோடி

பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்திற்கு திட்டங்களை அனுமதிக்கவில்லை என்றால் பரவாயில்லை,  ஆனால் அவரை  நாட்டை விட்டு வெளியேற செய்வோம் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை செய்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஜங்கானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில  முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, கிணறுகளில் மின்சார மீட்டர்களை வைக்க மாட்டோம். நாங்கள் உங்களுக்கு எதிராக போராடுவோம், தேவைப்பட்டால் டெல்லிக்கும் வருவோம், ஆனால் மின்சார மீட்டர்களை வைக்க மாட்டோம். பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்ய நினைத்தாலும் அவரால் முடியும். தாங்குவோம். 

கே.சந்திரசேகர் ராவ்

நரேந்திர மோடியிடம் பணம் கேட்டோமா? காசிப்பேட்டையில் ரயில்வே ஜங்ஷன் கேட்டோம், இல்லை என்பதுதான் பதில். மருத்துவக் கல்லூரி  கேட்டோம், இல்லை என்பதுதான் பதில். பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்திற்கு திட்டங்களை அனுமதிக்கவில்லை என்றால் பரவாயில்லை, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் கவனிப்போம். ஆனால் நரேந்திர மோடியை நாட்டை விட்டு வெளியேற செய்வோம். எங்கள் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடிய  நபரை கொண்டு வருவோம். 

சமத்துவ சிலை

தெலங்கானா மாநிலத்துக்காக போராடினோம், அதனை நாங்கள் பெற்றோம். தெலங்கானா மக்கள் என்னை ஆசிர்வதித்து, போராட தயாரானால்,  டெல்லியின் சுவரை உடைப்பீர்கள் என்று நான் சொல்கிறேன். கவனமாக இருங்கள் நரேந்திர மோடி இது தெலங்கானா, நான் ஒரு புலி. இவ்வாறு அவர் தெரிவித்தார். அண்மையில் ஹைதராபாத்தில் சமத்துவ சிலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்ற போது, பிரதமரை வரவேற்க தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் விமான நிலையத்துக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.