சீன உளவு கப்பல் : இலங்கை தடை விதித்தது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்..

 
anbumani

இலங்கைக்குள் சீனாவின் உளவுக் கப்பல் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பது  வரவேற்கத்தக்கது என  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

சீன உளவு கப்பல்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  “இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனாவின் யுவான் வாங்-5 உளவுக்கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கோணத்தில் இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். சீன உளவுக்கப்பலை இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என இலங்கை அரசை எச்சரிக்கும்படி மத்திய அரசை பாமக வலியுறுத்தியிருந்தது.

அன்புமணி ராமதாஸ்

 அதன்படி சீனக்கப்பலின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தக்கூடாது. அந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்து நடப்பதை மத்திய அரசு உறுதிசெய்யவேணடும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.