ஓபி ரவீந்திரநாத் எழுப்பிய கேள்விக்கு ஸ்ரீமதி தர்ஷனா ஜர்தோஷ் அளித்த பதில்

 
ஒப்ர்

மக்களவையில் கேள்வி நேரத்தில் நூல் விலை உயர்வு குறித்து ஓபி ரவீந்திரநாத் எம்பி எழுப்பிய கேள்விக்கு, அதற்கு  ஜவுளித்துறை இணை அமைச்சர் ஸ்ரீமதி. தர்ஷனா ஜர்தோஷ் எழுத்துப்பூர்வமான பதில் அளித்திருக்கிறார்.

ஜவுளி தொழிலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்திய நூல் விலை உயர்வு குறித்து தமிழகத்தில் உள்ள ஜவுளி மற்றும் விசைத்தறி சங்கங்களிடமிருந்து அரசுக்கு புகார்கள் வந்துள்ளதா ? அப்படி வந்து இருந்தால் நூலின் விலையை குறைக்கும் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா?  அப்படியானால் அதன் விவரங்கள் அது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?  என்று ரவீந்திரநாத்  எம்பி எழுப்பிய கேள்விக்கு ஜவுளி துறை  இணை அமைச்சர் ஸ்ரீமதி தர்ஷனா ஜர்தோஸ்,   ‘’ நூல் விலை உயர்வு தொடர்பாக தமிழகத்தில் உள்ள ஜவுளி விசைத்தறி சங்கங்களில் இருந்து சில கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன ’’என்று தெரிவித்துள்ளார்.

ஒப்ர்

 அவர் மேலும் அது குறித்து,   ’’பருத்தி மற்றும் பருத்தி நூல்களின் விலை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதால் சந்தையின் தேவை மற்றும் வளங்கள் மற்றும் அதிக சர்வதேச விலைகள் காரணமாக விலை அதிகரித்திருக்கிறது .  ஜவுளி அமைச்சகம் பருத்தி மற்றும் பருத்தி நூல்களின் விலைகள் தொடர்பாக பருத்தி மற்றும் பருத்தி நூல்கள் விலைகள் தொடர்பாக பருத்தி மதிப்பு சங்கிலி முழுவதும் உள்ள பல்வேறு பங்குதாரர்களுடன் அவர்களின் ஆர்வத்தை ஒத்திசைக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது .

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை கச்சா பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியில் இருந்து நிதி அமைச்சகம் விலக்கு அளித்திருக்கிறது.   உள்நாட்டு பருத்தி விலைகள் 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் அதன் உச்ச நிலையான ரூ. 1,03,00 ல் இருந்து ஒரு கேன்டிக்கு  ரூ. 88,500 ஆக குறைக்கப்பட்டுள்ளன. 

 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 40கள் கூம்புக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல்  ரூ.440 வரை இருந்த நூல் விலையும் ஜூலை 2022-ல் கிலோவுக்கு ரூ.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்திருக்கிறார்.