2,056 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த அதிர்ச்சி

 
i

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.  தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் 2056 அரசியல் கட்சிகள் ஆடிப் போயிருக்கின்றன.

 தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.  இந்த முடிவினால்தான் அரசியல் கட்சிகள் அதிர்ச்சியில் இருக்கின்றன.

e

 இந்திய தேர்தல் ஆணையம் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் 15 கட்சிகள் மட்டுமே தற்போது வரைக்கும் தேர்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது . உரிய அறிக்கையை தாக்கல் செய்யாத 2,174 அரசியல் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வருவாய்த் துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது .  

மேலும்,  வருமான கணக்கு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யாத 2056 அரசியல் கட்சிகளுக்கு அதுகுறித்த விவரங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் இணையதளத்தில் வெளியிடுவதோடு, உரிய ஆவணங்களுடன் 30 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வாய்ப்பு அளிக்கலாம் எனவும் கூறப் பட்டிருக்கிறது.

 இந்திய தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி சலுகைகளை பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் முடிவால் அரசியல் கட்சிகள் ஆடிப் போய் இருக்கின்றன.