உத்தர பிரதேச பொறுப்பை பிரியங்கா காந்திக்கு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் முடிவு தவறான அரசியல் செயல்.. வகேலா

 
பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசத்தின் பொறுப்பை பிரியங்கா காந்திக்கு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் முடிவு தவறான அரசியல்  செயல் என சங்கர்சிங் வகேலா தெரிவித்தார்.

காங்கிரஸின் ஜி23 தலைவர்கள் நேற்று முன்தினம் குலாம் நபி ஆசாத் வீட்டில் நடத்திய கூட்டத்தில்  குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா கலந்து கொண்டார். குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று சங்கர்சிங் வகேலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சங்கர்சிங் வகேலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:  ஹோலி தஹானுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியை உற்றுநோக்கும் பிரச்சினைகளும் தீப்பிழம்புகளாக வெடிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். 

சங்கர்சிங் வகேலா

உத்தர பிரதேசத்தின் பொறுப்பை பிரியங்கா காந்திக்கு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் முடிவு தவறான அரசியல் செயல். காங்கிரஸ் கட்சிக்கு சரியான ஆலோசகர் இருக்க வேண்டும். அவர்களிடம் (காங்கிரஸ்) இல்லை. காங்கிரஸை ஒன்றிணைக்க அனைவரும் உழைக்க வேண்டிய நேரத்தில், அவர்கள் காங்கிரஸை உடைக்க வேலை செய்கிறார்கள். காங்கிரஸின் ஜி23 தலைவர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இருக்கின்றனர், கட்சி தலைமையால் அவர்கள் எப்படி வேதனையடைந்துள்ளனர் என்பதை பற்றி பேசுகின்றனர். 

காங்கிரஸ்

தலைமுறை இடைவெளியை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அமைப்புக்குள் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் அவை ராகுல் காந்தியின் பொறுப்பாகும், அதேவேளையில்  சோனியா ஜி கட்சியை கையாளுகிறார். அகமது படேலின் இடத்தை யாராவது பிடித்திருந்தால், இப்போது உள்ள நிலைமை இருக்காது. ஜி23 தலைவர்கள் காங்கிரஸ் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முதிர்ச்சி மற்றும் அனுபவம் இல்லாததால், பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஜி23 என்பது காங்கிரஸூக்கு எதிரான கிளர்ச்சி அல்ல. அவர்கள் கட்சியின் செயல்பாடு குறித்த கவலைகளை முன்வைக்க விரும்புகிறார்கள். இந்தியாவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் இன்னும் முதலிடத்தில் உள்ளது. அதன் இருப்பு நாட்டுக்கு அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.