செங்கோட்டையன், ஜெயக்குமாருக்கு என்ன பதவி? இருவரில் து.பொ.செ. யார்?

 
ச்

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜெயக்குமார்.  அதற்கு அடுத்ததாக செங்கோட்டையன்.   தனக்கு பின்னர் செங்கோட்டையனைத்தான் முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கப்போகிறார் ஜெயலலிதா என்றெல்லாம் அப்போது பேச்சு இருந்தது.  ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்சை சமாதானப்படுத்த அவர் அதிகம் மெனக்கெட்டு வந்தார்.   இவர்கள் இருவருக்கும் இன்னமும் முக்கிய பொறுப்பு வழங்கப்படாமல் இருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செ

அதிமுகவுக்கு இரண்டு  மாநிலங்களவை உறுப்பினர் சீட் இருந்த நிலையில்,  ஒரு சீட்  ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மருக்கு போய்விட,  இன்னொரு சீட் ஜெயக்குமாறுக்கா? சி.வி சண்முகத்திற்கா? என்ற நெருக்கடி  வந்த போது ஜெயக்குமாருக்கு கட்சியின் முக்கிய பதவி அதாவது அவைத்தலைவர் பதவி வழங்கப்படும் என்று சமாதானம் சொன்னதால்,  அவர் சிவி சண்முகத்திற்கு சீட் கொடுத்துவிட ஒப்புக் கொண்டார் என்று அப்போது தகவல் வெளிவந்தது .  ஆனால் அந்த அவைத் தலைவர் பதவி தமிழ் மகன் உசேன் வசம்  சென்றுவிட்டது.    மிச்சம் இருக்கும் பொறுப்புகளுக்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி  பொறுப்பாளர்களை அறிவித்து விட்டார்.   இதில் ஜெயக்குமாருக்கு எந்த பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை.  அதே போல் செங்கோட்டையனுக்கும் பதவி அறிவிக்கப்படவில்லை.

சென்

எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக கே. பி. முனுசாமியும்,  நத்தம் விஸ்வநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   எடப்பாடி பழனிச்சாமி வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர் பதவி எஸ். பி. வேலுமணிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.   அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன் விடுவிக்கப்பட்டு அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்த தமிழ் மகன் உசேன் அவை தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.  

அமைப்புச் செயலாளர்களாக சிவி சண்முகம், செல்லூர் ராஜு, ஆர். காமராஜ்,  ஓ. எஸ். மணியன் கடம்பூர் ராஜு , கேபி அன்பழகன் , தனபால்,  ராஜேந்திர பாலாஜி,  ராஜன் செல்லப்பா , பாலகங்கா,  பெஞ்சமின் ஆகிய 11 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . இதில் செங்கோட்டையனுக்கும், ஜெயக்குமாருக்கும் மட்டும் ஏன் பதவியை வழங்கவில்லை என்று கேள்வி எழுத்திருக்கிறது அதிமுக வட்டாரத்தில். 

 இந்நிலையில்,  செங்கோட்டையன் , ஜெயக்குமார் இருவரில் ஒருவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருக்கிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.