அந்த அமைச்சர் ஓட்டலுக்கு கூப்பிட்டார்.. அந்த அதிகாரி எனக்கு தாலி கட்டினார் - புயலை கிளப்பிய சுவப்னா சுரேஷின் சுயசரிதை

 
sw

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் எனக்கு தாலி கட்டினார் என்று சுவப்னா சுரேஷ் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.  சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தான் தனக்கு தாலி கட்டியதாக சொப்பனார் சுரேஷ் தனது சுயசரிதை புத்தகத்தில் கூறியிருக்கிறார்.  சுவப்னா சுரேஷின் சுயசரிதை புத்தகம் கேரள அரசியலில் மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது.

 கடந்த 2020 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய நபர் சுவப்னா சுரேஷ்.   வழக்கில் முன்னாள் முதல்வர் உட்பட பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.   இது தொடர்பாக வழக்குகள் நடந்து வருகின்றன.   இந்த தங்க கடத்தல் சம்பவம் தொடர்பாக  என்ஐஏ,  மத்திய அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே விசாரணை நடத்தின. 

ss

 இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது சுவப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை புத்தகத்தால் கேரளா அரசியலில் மீண்டும் பரபரப்பு எழுந்திருக்கிறது .  

‘சதியின் பத்மப வியூகம்’ என்கிற பெயரில் சுவப்பனா சுரேஷ் எழுதியிருக்கும் சுயசரிதை புத்தகத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா,  ஐ ஏ எஸ் அதிகாரி சிவசங்கரன்,  முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.  

கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத்தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில்  அரசு சார்ந்தவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் கூறியிருந்தேன்.   ஆட்சி மாறினால்  விசாரணையில் போக்கு மாறும் என்று என்னை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் என்றும்,  மீண்டும் பினராயி ஆட்சிக்கு வந்தால் வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறி என்னை நம்ப வைத்து அந்த ஆடியோவை  பதிவு செய்தார்கள்.

pi

 முதல்வரும், முன்னாள் முதன்மைச் செயலாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.   அந்த நேரத்தில் ஒருபோதும் உன்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.  இரண்டு பேருமே இந்த வழக்கில் கைதான பின்னர் முதல் முதலாக என் ஐ ஏ அலுவலகத்தில் சிவசங்கரை பார்த்த போது என் கழுத்தில் அவர் கட்டிய தாலி தான் இருந்தது .

நான் யாருக்கு எதிராகவும் பாலியல் புகார் சொல்ல விரும்பவில்லை.   ஆனால் முன்னாள் அமைச்சரும் கேரள சட்டசபையில் முக்கிய நபருமாக இருந்த ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பல முறை அழைத்து இருக்கிறார்.   அதற்கு நான் உடன்படவில்லை.  இது குறித்து அவர் எனக்கு பலமுறை  அனுப்பிய வாட்ஸ் அப் தகவல்கள் இப்போதும் என்னிடம் பத்திரமாக இருக்கின்றன.   நான் விசாரணை அதிகாரிகளிடம் அதை ஏற்கனவே கொடுத்து விட்டேன் என்று இது மாதிரி ஏகப்பட்ட பரபரப்பு தகவல்களை அந்த புத்தகத்தில் கூறியிருப்பதால் கேரள அரசியலில் மீண்டும் புயலை கிளப்புகிறார் சுவப்னா சுரேஷ்.